தானாகவே தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் தோனி.. முதல் படத்திலேயே வந்த பேராசை

MS Dhoni: இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர் ஆன எம் எஸ் தோனி தற்போது தமிழ் சினிமாவில் தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் தயாரிப்பை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் முதல் படமான இப்படத்தில் இவர் மேற்கொண்ட பேராசை குறித்த தகவலை இங்கு காண்போம்.

தன் விளையாட்டு திறமையால் உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் இவர் தற்பொழுது தமிழ் சினிமாவை மையம் இட்டு உள்ளார். அதை தொடர்ந்து இவர் மேற்கொண்ட முதல் தயாரிப்பு தான் எல்ஜிஎம் ( லேட்ஸ் கேட் மேரிட்).

ஏற்கனவே தன் தயாரிப்பை கர்நாடகா ஃபிலிம் இண்டஸ்ட்ரில் தொடங்குவதாக இருந்த இவர் தற்பொழுது தமிழ் சினிமாவை தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் எல்ஜிஎம் படம் கிரிக்கெட் சம்பந்தமான கதை என்பதால் இத்தகைய முயற்சியை மேற்கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

நதியா, யோகி பாபு, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஐபிஎல் தொடரை போன்று இப்படத்தில் இடம்பெறும் காட்சிகளுக்கு பக்க பலமாய் தன் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இப்படத்தில் இவர் கெஸ்ட் ரோலில் இடம்பெறப் போகிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

மேலும் தமிழ்நாடு மீது உள்ள பாசத்தால் தற்போது தன் தயாரிப்பை இங்கு தொடங்கி உள்ளார். இவர் படத்தில் வந்து சென்றாலே பெரிதாக பார்க்கப்படும். மேலும் அப்படியே கொஞ்சம், கொஞ்சமாய் பெயர் எடுத்து ஹீரோ ஆகவும் முடிவெடுத்துள்ளாராம் தோனி.

ஒரு படத்தை தயாரித்தும் அதில் நடிக்க தூங்கும் போது இவ்வளவு பேராசையா என சினிமா வட்டாரங்கள் இவரை பெரிதாக பார்க்கின்றது. இவருக்குள் முளைத்த ஆசை நிறைவேறுதோ இல்லையோ கண்டிப்பாக இவர் தன் பெயரை கெடுத்துக் கொள்வது உறுதி தான் எனவும் பல பிரபலங்கள் கூறி வருகின்றனர்.