Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவின் ஹோட்டலுக்கு லோக்கல் கவுன்சிலர் வந்து பிரச்சினை பண்ணுகிறார் என தெரிந்து கொண்ட கோபி, பாக்கியாவின் ஹோட்டலுக்கு வருகிறார். அங்கே வந்ததும் பாக்யாவின் ஹோட்டலில் காலையிலிருந்து இரவு முழுவதும் உட்கார்ந்து யார் என்ன பிரச்சினை பண்ணுகிறார் என்பதை பார்க்கலாம் என முடிவு பண்ணி விட்டார்.
அந்த வகையில் கிடைக்கிற கேப்பில் எல்லாம் பாக்கியவை ரூட்டு விடும் விதமாக சைட் அடித்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த செல்வி அக்கா, கோபி சார் உன்னைய தான் பார்த்துக் கொண்டிருக்கிறார் என பாக்யாவிடம் சொல்கிறார். பாக்யாவும் கோபியை எப்படியாவது இங்கிருந்து போக வைக்கலாம் என பேசப்போகிறார்.
ஆனால் கோபி எதற்கும் அசராமல் பாக்கியா ஹோட்டலில் இருந்து வெளியே போகவே இல்லை. அந்த நேரத்தில் லோக்கல் கவுன்சிலர் வந்து பிரச்சினை பண்ணுவதற்கு வருகிறார். ஆனால் கோபி, கோபமே படாமல் காமெடி பண்ணி அந்த லோக்கல் கவுன்சிலருக்கு பயமுறுத்தி அங்கே இருந்து கிளப்பி விடுகிறார்.
பிறகு நேரம் ஆனதும் பாக்யா ஹோட்டலில் இருந்து கிளம்பியதும் பின்னாடியே கோபியும் காரில் வர ஆரம்பித்து விட்டார். இதை வேண்டாம் என்று பாக்கிய தடுத்தும் கோபி எதைப் பற்றியும் யோசிக்காமல் பாக்யாவின் காவலனாக போகிறார். பிறகு பாக்யா வீட்டிற்குள் போனதும் கோபி அவருடைய வீட்டிற்கு போய்விடுகிறார். அப்படி பாக்கிய தூங்க போகும் பொழுது ஈஸ்வரி தனியாக இருப்பதை பார்த்து பாக்கியா, ஈஸ்வரியுடன் தூங்க போய் விடுகிறார்.
அடுத்ததாக சுதாகர் மற்றும் நித்தேஷ் ஆபீஸ்க்கு கிளம்பி கொண்டிருக்கும் பொழுது இனியா, அம்மாவின் ஹோட்டல்லை நான் மேனேஜ் பண்ணுகிறேன் என்று சொல்கிறார். அதற்கு சுதாகர் மற்றும் நித்தேஷ் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து விடுகிறார்கள். உடனே இனியா எனக்கு வீட்டில் சும்மா இருக்க போராக இருக்கிறது. ஏதாவது பிரயோஜனமாக பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன் என்ன சொல்கிறார்.
உடனே சுதாகர் உனக்கு வீட்டில் இருக்க போர் அடிக்கிறது என்றால் உனக்கு ஒரு வேலை தருகிறேன். உங்க அம்மா வைத்திருக்கும் அந்த மெஸ்ஸை எப்படியாவது இழுத்து மூட சொல்லு. ஏனென்றால் அதனால் எனக்கு பெரிய கௌரவ குறைச்சலாக இருக்கிறது. உனக்கு இரண்டு நாள் டைம் தருகிறேன் அதற்குள் உங்க அம்மாவிடம் பேசி அந்த ஹோட்டலை அடைத்து விட்டு வீட்டில் இருக்க சொல்லு என்று இனியா மூலம் பாக்யாவுக்கு செக் வைக்கிறார்.
இல்லை என்றால் உன்னுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் பார்த்துக் கொள் என்று பிளாக்மெயில் பண்ணும் விதமாக பேசிவிட்டு போய்விடுகிறார். இனியாவது நித்தேஷ் மற்றும் சுதாகரின் சுயரூபம் என்னவென்று இனியா புரிந்து கொண்டு இந்த வாழ்க்கையை விட்டு விட்டு பாக்கிய சொன்னபடி நல்லா படித்து சொந்த காலில் சுயமாக நிற்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.