H. Vinoth : அந்த காலகட்ட தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பெரும்பாலும் இயக்குநர்களாகவே வலம் வந்தார்கள். அவ்வளவாக முந்தய காலகட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சி பெறவில்லை என்றே கூறலாம். ஆனால் தற்போது உள்ள இயக்குனர்கள் ஒரு சில படங்கள் எடுத்து முடித்தவுடன் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து விடுகின்றனர்.
பெரும்பாலும் நிறைய இயக்குனர்கள் தற்போதுள்ள காலகட்டத்தில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகின்றனர். மணிரத்தினம், கே எஸ் ரவிக்குமார், ஏ ஆர் முருகதாஸ், வெற்றிமாறன் மற்றும் சங்கர் ஆகியவர்கள் இயக்குனர்களாக இருந்து தயாரிப்பாளராக உருவெடுத்தவர்கள்.
தற்போது உள்ள காலகட்டத்திலும் இளம் இயக்குனர்களும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப் குமார் ஆகியவர்கள் புதிய பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சிறப்பாக செயலாற்றி வருகின்றனர்.
லோகேஷ், நெல்சன் ரூட்டை கையில் எடுக்கும் ஹச் வினோத்
இந்த வரிசையில் இயக்குனர் ஹெச் வினோத் அடுத்த அவதாரமாக தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். இவர் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயற்றியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்துமே கதைகள் சற்று வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
இவர் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தை மகளிர் மட்டும் படைய இயக்குனர் பிரம்மா இயக்க உள்ளதாகவும், திரைக்கதையை ஹெச் வினோத் அவர்கள் இணைந்து எழுத உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அடுத்தடுத்து நம் தமிழ் சினிமாவின் வளர்ச்சி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. எந்த ஒரு பாகுபாடுமின்றி இன்று திறமை இருந்தால் போதும் என்ற நிலை உருவாகி சாதாரண மனிதனும் சாதனையாளனாக மாற்றி கொண்டிருக்கிறது நம் தமிழ் சினிமா.