அப்ப ஹீரோ இப்போ கேரக்டர் ஆர்டிஸ்ட்.. மவுசு குறையாத 5 சீனியர் நடிகர்களின் சம்பளம், முதலிடத்தில் விஜய்யின் அப்பா

தன்னுடைய திறமையால் தமிழ் சினிமாவில் கிடைத்த அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் ஹீரோக்கள். ஹீரோக்கலாய் இருந்த இவர்கள் ஒரு காலகட்டத்திற்கு பிறகு கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் களமிறங்கி உள்ளனர்.

கதாபாத்திரம் எவ்வாறு இருப்பினும் தனக்கு கொடுத்த வாய்ப்பை ஏற்கும் சூழலுக்கு தன்னை மாற்றிக் கொள்கின்றனர். அவ்வாறு இன்று வரை தன்னுடைய மவுசு குறையாது நடித்து வரும் 5 நடிகர்களை பற்றி இங்கு காணலாம்.

90ஸ் காலகட்டத்தில் நடித்த ஹீரோக்கள் எல்லோருமே இப்பொழுது சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் மாஸ் ஹீரோக்கலாய் வலம் வந்த இவர்கள் தற்போது கிடைக்கும் அண்ணன், அப்பா போன்ற சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்து வருகிறார்கள்.

இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் கதாபாத்திரம் மட்டுமே கை மாறி விட்டது ஆனால் அன்று வாங்கிய அதே சம்பளத்தை தான் தற்போதும் வாங்கி வருகின்றனர். அதற்கு உதாரணமாக சின்னத்தம்பியாய் தமிழ் சினிமாவில் இடம்பெற்ற நம் பிரபு படத்திற்கு சுமார் 50 லட்சம் வாங்கிய இடத்தில் தற்போதும் 8-10 கோடி வாங்கி வருகிறார்.

இவரை தொடர்ந்து ஆக்சன் ஹீரோவாய் வலம் வந்த சரத்குமார் அப்போது 45 -70 லட்சம் வாங்கிய இடத்தில் தற்பொழுது வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக இடம் பெற்று சுமார் 2 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். அதேபோன்று வில்லன் கதாபாத்திரத்தில் இடம் பெற்ற நடிகர் நாசர் ஆரம்ப காலத்தில் 40 லட்சம் வாங்கிய இடத்தில் தற்பொழுது இவர் மேற்கொள்ளும் சப்போர்ட்டிங் ரோல் இருக்கு 4-6 கோடி சம்பளத்தை பெற்று வருகிறார்.

அவ்வாறு மறக்க முடியாத வில்லன் கதாபாத்திரத்தில் இடம் பெற்ற ரகுவரனின் கடைசி படமான யாரடி நீ மோகினி படத்தில் 20 லட்சம் சம்பளமாக வாங்கி உள்ளார். அதைத் தொடர்ந்து பார்த்திபன் அந்த காலகட்டத்தில் சம்பளமாக 35 லட்சம் வாங்கியுள்ள இவர் தற்பொழுது தன் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளிவந்த படமான இரவின் நிழலில் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.