அஜித் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான வில்லன் படத்தில் கதாநாயகியாகவும், அதை தொடர்ந்து விஜய்யுடன் திருமலை படத்திலும் நாயகியாக நடித்த நடிகை கிரண் ரத்தோட் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து அதன் பின்னர் விவாகரத்து செய்துவிட்டதால் அதற்கான காரணத்தை தற்போது உடைத்துப் பேசி இருக்கிறார். இவருக்கு சில காலங்களுக்கு பிறகு சினிமா வாய்ப்புகள் குறையவே சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
அதன் பிறகு சில திரைப்படங்களில் தலைகாட்டி வந்த இவர் சமீப காலமாக தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் இவர் தன்னுடைய ஓவர் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் கிரண், ‘தனக்கு ஆண் துணை தேவையே இல்லை. என்னை மகிழ்வித்துக்கொள்ள நானே போதும்’ என்று கூறி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
மேலும் எந்த ஆணுடைய தேவையும் எனக்கு இருக்காது. என்னை நானே சந்தோஷப்படுத்தி கொள்வேன் என்று அந்த வீடியோவில் பேசி இருக்கிறார். ஒருவேளை அவருடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பு தான் இப்படி அவரை சொல்ல வைத்திருக்கும்.
பெரும்பாலும் கிரணுக்கு ஆண் ரசிகர்கள் தான் அதிகம் இருக்கும் நிலையில், இவருடைய இந்த வீடியோவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி நெட்டிசன்களும் ஆண்களை வெறுக்கும் கிரணை குறித்து தாறுமாறாக கமெண்ட் செய்கின்றனர்.