தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த அமலா பால், இப்போது பட வாய்ப்புகள் கிடைக்காமல் படு கவர்ச்சியான புகைப்படங்களின் மூலம் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்.
தமிழில் விக்ரம், ஆர்யா, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அமலா பால், இயக்குனர் ஏஎல் விஜய் உடன் டேட்டிங் செய்து 2014 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன இரண்டே ஆண்டுகளில் அவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
அதன் பின்பு படுக்கவர்ச்சியான கிளாமர் போட்டோ ஷூட்டை நடத்தி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்தார். அதிலும் ஸ்விம்மிங் சூட் புகைப்படங்களை தாறுமாறாக பதிவிட்டு கொண்டிருந்தார். இருப்பினும் புது நடிகையின் வரவால் அமலா பாலுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் தற்போது பாலிவுட் பக்கம் சென்று விட்டார். அங்கு எந்த மாதிரி ரோல் கொடுத்தாலும் நடிப்பேன் என அனைத்திற்கும் தயாரான அமலா பால், தற்போது சிறுத்தை படத்தின் ஹிந்தி ரீமேக் ‘போலோ’ என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இதில் கதாநாயகன் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார்.
இந்த படத்தில் படுக்கையறை காட்சிகளில் எல்லாம் வஞ்சகம் இல்லாமல் கவர்ச்சியை காட்டிய அமலா பாலுக்கு சம்பளத்தை அள்ளிக் கொடுக்காமல் கிள்ளி கொடுத்து விட்டனர். இந்த படத்திற்காக அமலா பால் வெறும் 25 லட்சம் தான் சம்பளமாக வாங்கினாராம்.
காட்டுன கவர்ச்சி எல்லாம் செல்லுபடியாகாமல் போனதே! என்று தன்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுவதற்காக தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் தயாராக உள்ளார். இதை அடுத்து அவர் மீண்டும் பட வாய்ப்புகளை அதிகமாக பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.