சந்தோசமாக இல்லை.. அதுக்காக இப்படியா சொல்றது மிஷ்கின்

Report : மிர்சி சிவா ஹீரோவாக, அஞ்சலி மற்றும் கிரேஸ் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம் “பறந்து போ”. இப்படம் ஜூலை 4 ஆம் தேதி அனைத்து தியேட்டர்களிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்துள்ளது.

சந்தோசமாக இல்லை-மிஷ்கினின் பேட்டி!

பேட்டி : “என்னை இனிமேல் யாராவது சினிமா நிகழ்வுக்கு கூப்பிட்டால் 5 லட்சம் கொடுக்க வேண்டும். எப்போது சினிமாவை விட்டு போகலாம் என்று நினைக்கிறேன். நான் நிஜமாகவே சினிமாவில் சந்தோசமாக இல்லை” என்று மிஸ்கின் பேட்டி அளித்தது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் பதிலடி!

மிஷ்கினின் பேட்டிக்கு பதிலடி கொடுத்த பத்திரிகையாளர் சேகுவேரா யூடியூப்பில் பேசியதாவது, மிஸ்கின் அதிக புத்தகங்கள் படிக்கும் பழக்கமுடையவர். அவர் ஒரு திறமையான இயக்குனரும் கூட, ஆயிரம் தான் நிறைய திறமைகள் இருந்தாலும் அவர் சினிமாவில் உணர்ந்த கஷ்டங்கள் அவருக்கு மட்டும் தான் தெரியும். அந்தக் கஷ்டத்தினால் கூட அவர் சினிமாவை விட்டு போக நினைக்கலாம்.

திறமை வாய்ந்த இயக்குனர்!

பேய் படம் என்றால் எல்லாருக்கும் பயம் தான் இருக்கும் ஆனால் “பிசாசு” என்ற அந்த பேய் படத்திலேயே ஹீரோயினை கொண்டு வந்து தேவதையாக திரையில் காண்பித்தவர் இயக்குனர் மிஸ்கின். அவ்வளவு திறமையான இயக்குனர். இப்படிப்பட்ட இயக்குனர் சினிமாவுக்கு கிடைப்பது கஷ்டம் தான்.

சினிமாவை விட்டு விலக வேண்டும் என்ற மிஸ்கினின் எண்ணம் சரிதான், ஆனால் ஒருபோதும் விலக வேண்டாம் என்று சினிமா நம் காலை பிடித்து கெஞ்சாது. அதை மட்டும் அவர் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் சினிமா என்பது ஒரு பெரிய கடல், யாராலும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது.