உண்மையை சொல்ல போனால் தமிழ் சினிமாவை ஒரு பக்கம் தோள் கொடுத்து அரண் போல் தாங்கி கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். விஜய், அஜித் எல்லாம் ஐம்பதை தாண்டிய பின்னரே அசந்து விட்டனர். மெல்ல மெல்ல தமிழ் சினிமாவிற்கு எண்டு கார்டு போட்டு வருகிறார்கள்.
74 வயதை கடந்த போதிலும் ரஜினி தான் அதற்கு தகுதியானவர் என லோகேஷ் கூலி படத்தை வேறு மாதிரி செதுக்கி கொண்டிருக்கிறார். அவர் செய்து கொண்டிருக்கும் ராஜதந்திரம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
நாகர்ஜுனா, அமீர்கான், உபேந்திரா, சத்யராஜ் என ஒரு பெரிய நடிப்பு திமிங்கல கூட்டமே இந்த படத்தில் இருக்கிறது. இது போக வளரும் நடிகர்களான சௌபின் சாகர், ரீபா மோனிகா போன்று திறமையுள்ள ஆர்டிஸ்ட்டுகளை இதில் கொண்டு வந்திருக்கிறார்.
இதை வைத்து லோகேஷ் போடும் கணக்கு தெளிவாக தெரிகிறது. ஏன் புஷ்பா படம் மட்டும் தான் ஆயிரம் கோடி வசூல் செய்யுமா? நாம் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம் அதுவும் போக அமீர்கான் நாகார்ஜுனா போன்ற நடிகர்கள் இருக்கையில் எல்லாம் சாத்தியமே என்று 1000 கோடிகளுக்கு ஸ்கெட்ச் போடுகிறார்.
அமீர்கான் சமீபத்தில் கொடுத்த பேட்டி, லோகேஷ் செய்யும் தந்திரத்தை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. இந்த படத்திற்கு இப்பொழுதே ப்ரோமோசனை ஆரம்பித்துவிட்டார் அமீர்கான். கூலி படத்தை பற்றிய பல சுவாரசியத்தை பகிர்ந்து வருகிறார். அதுவும் போக லோகேஷ் உடன் அடுத்த படத்தில் இணைகிறேன் என்று கூலி படத்தை மறைமுகமாக ப்ரோமொட் செய்கிறார்.