சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள லால் சலாம் படத்தின் ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே அந்த படத்தின் முக்கிய பிரபலம் ஒருவர் விலகுவதாக சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும் படகுழுவே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஏனென்றால் 30 வருடங்களாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நெருக்கம் நண்பராக இருந்த இவர், இப்படி ஒரு முடிவை வெளியிட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா 2012 ஆம் ஆண்டு தனுஷின் 3 படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி, அதன் பின் சூதாட்டத்தை மையமாக வைத்து கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார்.
இதன்பின் 8 வருடங்களாக சினிமாவில் இருந்து விலகிய ஐஸ்வர்யா இப்போது மீண்டும் இயக்குனராக லால் சலாம் படத்தை இயக்குவதன் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இந்த படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிறது. நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார். லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ள இந்தப் படத்தின் பூஜை கடந்த நவம்பர் மாதம் போடப்பட்டது. அதன் பின் அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கப்படுவதற்காக ஆரம்பிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென்று அந்தப் படத்தின் ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சியான தகவலை பதிவிட்டுள்ளார்.
‘ப்ரீ புரொடக்சஷன் பணிகளின் போது கருத்து வேறுபாட்டின் காரணமாக லால் சலாம் படத்தில் பணிபுரிய எனக்கு விருப்பமில்லை. ஆகையால் இனிமேல் வரும் போஸ்டர்களின் என்னுடைய பெயரை நீக்கி விடுங்கள்’ என்று பதிவிட்டு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் லைக்கா நிறுவனத்தை டேக் செய்திருக்கிறார்.
மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் பூர்ணிமா இருவரும் 30 வருடங்களுக்கு மேலாக தோழிகளாக இருந்து வந்துள்ளனர். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது மட்டுமில்லாமல் லால் சலாம் படப்பிடிப்பு துவங்க இருக்கும் கடைசி நேரத்தில் பூர்ணிமா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது படகுழுவிற்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
லால் சலாம் படத்தின் ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ட்விட்
