Ponniyin Selvan: எம்ஜிஆர் காலத்தில் இருந்தே பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க பல இயக்குனர்கள் முற்பட்டார்கள். அவர்களின் கனவு எல்லாம் கனவாக போக மணிரத்னம் தான் நினைத்ததை சாதித்து காட்டி விட்டார். தனது மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனத்துடன் லைக்காவை இணைத்துக் கொண்டு 500 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்திருந்தார்.
இதில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் வாசகர்களை இரண்டாம் பாகம் திருப்திபடுத்தவில்லை.
காரணம் கல்கி நாவலில் சொன்னது போல் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை எடுக்காமல் மணிரத்னத்தின் கற்பனைக்கு ஏற்ப எடுத்திருந்தார். ஆரம்பத்தில் பொன்னியின் செல்வன் படத்தை பலர் கைவிட காரணம் மிகப்பெரிய நாவலை கண்டிப்பாக ஒன்று, இரண்டு பாகங்களில் எடுத்து விட முடியாது.
அதுமட்டுமின்றி இப்படத்தை எடுக்க பல கோடிகள் பட்ஜெட் தேவைப்படும் என்பதால் கைவிடப்பட்டது. ஆனால் மணிரத்தினம் தான் சொந்த தயாரிப்பில் பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்த நிலையில் அதில் கஞ்சத்தனத்தை காட்டி இருக்கிறார். இதனால் மணிரத்னம் மேல் இருந்த நல்ல பெயர் கெட்டுப் போய்விட்டது.
மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் பெரிய அளவில் வசூலையும் பெற்றுத் தரவில்லை. மணிரத்னம் மீது இதில் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக ரசிகர்கள் அடுத்ததாக அவருடைய படத்தை பார்க்க விருப்பமில்லாமல் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் மணிரத்னம் மரியாதையை சேர்த்து வைத்திருந்தார்.
ஆனால் பொன்னியின் செல்வன் படத்தால் அதை கெடுத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் அடுத்ததாக கமலின் படத்தை மணிரத்னம் இயக்கம் உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மணிரத்னத்திற்காக இல்லை என்றாலும் கமலுக்காக அந்த படத்தை ரசிகர்கள் பார்க்க வாய்ப்பு இருக்கிறது என பலரும் கூறி வருகிறார்கள்.