சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் அவ்வாறு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படங்களை இயக்குனர்கள் இரண்டாம் பாகம் எடுத்து வருகிறார்கள்.
ஆனால் முதல் பாகத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படங்கள் இரண்டாம் பாகத்தில் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. ஆனால் தற்போதும் பல இயக்குனர்கள் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ரன் படத்தின் இரண்டாம் பாகத்தை லிங்குசாமி எடுக்க உள்ளார்.
இந்நிலையில் ரஜினியின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் பாட்ஷா. இப்படம் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995-ல் வெளியானது. இப்படத்தில் முன்னாள் மும்பையில் தாதா பாட்ஷாவாக இருந்த ரஜினிகாந்த் அதன் பின்பு ஆட்டோக்காரன் மாணிக்கமாக நடித்திருந்தார்.
இப்படத்தில் ரகுவரன் மார்க் ஆன்டனியாக தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என ரஜினியிடம் கேட்டுள்ளனர். ஆனால் ரஜினி இரண்டாம் பாகம் எடுப்பதில் எனக்கு எந்த ஒரு விருப்பமும் இல்லை என கூறியுள்ளாராம்.
அதுமட்டுமல்லாமல் ரகுவரன் இல்லாமல் பாட்ஷா படத்தை எடுப்பது எனக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். அதேபோல் ரஜினியின் படங்களில் சூப்பர் ஹிட்டான படையப்பா மற்றும் சந்திரமுகி ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று ரஜினியிடம் கேட்ட போது வேண்டவே வேண்டாம் என மறுத்து விட்டாராம்.
ஏனென்றால் ரஜினிக்கு அதே கதையை தொடர்வதில் விருப்பம் இல்லையாம். அதுமட்டுமல்லாமல் அந்த படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் பலர் தற்போது இல்லை. இதனால் ரஜினியின் தன் படங்களில் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் விருப்பமில்லாமல் உள்ளார். ஆனால் மிக வற்புறுத்தலின் பேரில் எந்திரன் படத்தின் தொடர்ச்சி 2.0 படத்தில் ரஜினி நடித்திருந்தார்.