Rajini: சூப்பர் ஸ்டார் இப்போது கேப் விடாமல் அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி விட்டார். ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு உடனே அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
அதை ஹச் வினோத் இயக்கப் போகிறார் என்பது கூடுதல் செய்தி. இது ஒரு பக்கம் இருக்க சூப்பர் ஸ்டார் இப்போது சிறு குழந்தை போல் சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளாராம்.
லோகேஷ் அப்படி என்ன செஞ்சாரு
அதற்கு காரணம் லோகேஷ் தான். சமீபத்தில் ரஜினி கூலி படத்தின் முதல் பாதியை பார்த்திருக்கிறார். அதை பார்த்ததுமே அவருக்கு அவ்வளவு உற்சாகமாம். அந்த அளவுக்கு ஃபர்ஸ்ட் ஆஃப் நன்றாக வந்திருக்கிறதாம்.
ஏற்கனவே லோகேஷ் இது தலைவருக்கான தனித்துவமான கதை என குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஏற்றது போல் கதாபாத்திர பெயர் தொடங்கி ஒவ்வொன்றுமே ரசித்து ரசித்து செய்திருக்கிறார்.
சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் இதை உணர முடிந்தது. அப்படி என்றால் படம் சும்மாவா இருக்கும். நிச்சயம் ரசிகர்களுக்கு வேற லெவல் கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.
அந்த வகையில் முதல் பாதியை பார்த்து சூப்பர் ஸ்டார் ஹாப்பி ஆகிவிட்டார். முழு படத்தையும் பார்த்தால் நிச்சயம் லோகேஷ்க்கு பாராட்டு மழை தான்.
மேலும் ஆகஸ்ட் 14 வெளிவர இருக்கும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் ஒவ்வொன்றையும் ஸ்பெஷலாக வெளியிட இருக்கிறது சன் பிக்சர்ஸ். பார்ப்போம் கூலி 1000 கோடியை தட்டி தூக்குமா என்று.