ஸ்ரீகாந்த் அளித்த பரபரப்பான வாக்குமூலம்.. எத்தனை வருட ஜெயில் தண்டனை தெரியுமா?

Srikanth : சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அனைத்து உள்ளங்களிலும் இடம் பிடித்த நடிகர் ஸ்ரீகாந்த் இன்று போ**தப் பொருள் அடிமை என்ற பெயரால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறார்.

நடந்தது இது தான்

பிரசாந்த் என்பவர் போ**த பொருள் பயன்படுத்தி போலீசில் மாட்டிய நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் இடம் தான் இந்த கொக்**கைனை வாங்கினேன் என்று கூறியது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் விசாரிக்கத் தொடங்கிய போலீசார், நடிகர் ஸ்ரீகாந்த்தை நேரில் வர வைத்து மருத்துவ பரிசோதனை நடத்தினர். சிறிது நேரம் கழித்து மருத்துவ பரிசோதனையில் ஸ்ரீகாந்த் போ**த பழக்கமுடையவர் என்று உறுதி செய்யப்பட்டது.

இதன் பின்னணி என்ன..??

இதை விடாமல் மேலும் விசாரணை செய்த போலீஸ் :

விசாரணையில் ஸ்ரீகாந்தின் Google pay -இல் இருந்து கிட்டத்தட்ட ₹4.72 லட்சம் செலவழிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது NDPS சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட காவலில் அடைக்கப்பட்டனர்.

பரபரப்பை ஏற்படுத்திய வாக்குமூலம்..

அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் 250 கிராம் கொக்**ன் பாக்கெட்டுகள் வாங்கினேன். அந்த கொக்**னை வைத்து தான் கடந்த சனிக்கிழமை வீட்டில் பார்ட்டி நடத்தினேன்.

பிரசாந்த் என்னை வைத்து படம் தயாரித்துள்ளார். எனக்கு சேர வேண்டிய 10 லட்ச ரூபாயை கேட்டபோதுதான் இந்த கொக்**னை கொடுத்து பழக்கினார். நான் பணம் கேட்கும் போதெல்லாம் இந்த கொக்**னை கொடுத்தது அவர்தான், அதன் மூலம் தான் இந்த பழக்கம் அதிகமானது – ஸ்ரீகாந்த்.

10 வருட தண்டனை!

நடிகர் ஸ்ரீகாந்த் மீது போ**தப் பொருள் உட்கொள்ளல் மற்றும் வைத்திருத்தல் குற்றச்சாட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. NDPS சட்டத்தின் படி இவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.