சூர்யாவின் கங்குவா, ரெட்ரோ போன்ற படங்கள் எதிர்பார்த்து அளவு ஓடவில்லை. இந்த சூழ்நிலையில் வாடிவாசல் படத்தை கையில் எடுத்தால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இடைவேளை விழுந்து விடும். ஏற்கனவே கோலிவுட் வட்டாரத்தில் சூர்யாவிற்கென்று இருந்த இமேஜ் கம்மியாகிக் கொண்டே போகிறது.
இதனை தக்க வைத்துக்கொள்ள சூர்யா வாடிவாசலை கைவிட்டால் வலி பிறக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இவரை வைத்து படமெடுப்பதற்காக ஐந்துக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான பேச்சுவார்த்தையும் சூர்யா தரப்பில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அப்படி ஆறு மாதத்திற்கு ஒரு படம் என்று கையில் எடுத்தால் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் இடம் பிடிக்க முடியும் சூர்யா. ஏற்கனவே ஆர் ஜே பாலாஜியுடன் சூர்யாவின் 45 ஆவது படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது.
46வது படத்திற்கான பட பூஜை பழனி கோவிலில் நேற்று போடப்பட்டு புகைப்படங்கள் வைரலானது. இந்த படத்தை Venky Atluri இயக்குகிறார், சூர்யாவுடன் மமீதா பைஜு ஜோடி போடுகிறார், ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்காக சஞ்சய் ராமசாமி போல் வேற லெவல் லுக்கில் சூர்யா மாறிருப்பது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
பாலிவுட்டில் கர்ணன் படத்தில் சூர்யா நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஜான்விகபூர் ஜோடியாக இணை உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் ஒரு படம் உருவாக உள்ளது. இதைத் தாண்டி வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படம் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை, இந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்க உள்ளார்.
இன்னும் இரண்டு பாலிவுட் இயக்குனர்களுடன் சூர்யா நடிப்பதற்கு சிறந்த கதை தேர்வு செய்து வருகிறாராம். இதனால் வெற்றிமாறன் வாடிவாசல் இழுத்துக் கொண்டே போவதால் மற்ற படங்களை முடித்துவிட்டு வாடிவாசல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் இரண்டு வருடம் ஒரே படத்தில் முடங்கி கிடப்பதற்கு 4 படங்களை ரிலீஸ் செய்து மார்க்கெட்டை உயர்த்தலாம் சூர்யா.