மாரி செல்வராஜுக்கு நோ சொன்ன ஹீரோ.. பரியேறும் பெருமாள் படத்தை மிஸ் செய்த வாரிசு நடிகர்

Mari Selvaraj :மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்கள் பெரிய வரவேற்பை பெற்றது. இப்போது துருவ் விக்ரமை வைத்து அவர் பைசன் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த சூழலில் பரியேறும் பெருமாள் படத்தில் வாரிசு நடிகர் நடிக்க மறுத்த விஷயத்தை மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார். கதிர், ஆனந்தி நடிப்பில் உருவான இந்த படம் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிபலிப்பாக தான் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தின் கதையை முதலில் அதர்வா இடம் தான் மாரி செல்வராஜ் கூறினாராம். நடிகர் முரளியின் தீவிர ரசிகர் ஆக இருந்த இவர் பாணா காத்தாடி படத்தை பார்த்துள்ளார். அப்போதே அதர்வாவை மனதில் வைத்து பரியேறும் பெருமாள் கதையை எழுதி இருந்தாராம்.

மாரி செல்வராஜின் படத்தை ரிஜெக்ட் செய்த ஹீரோ

எப்படியாவது அதர்வாவை தன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று கதையை சொல்ல சென்றாராம். ஆனால் அப்போது அதர்வா தன்னுடைய படத்தில் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை இதனால் மனம் வருந்தினேன் என்று மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார்.

அதன் பிறகு தான் கதிரை வைத்து அந்த படத்தை இயக்கினேன். அதர்வாவின் அந்த சந்திப்பிற்கு பிறகு இப்போது தான் அவரை நேரில் பார்ப்பதாக டிஎன்ஏ இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் பேசி இருக்கிறார்.

அதர்வா நடித்திருந்தாலும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை தான் பெற்றிருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு படத்தை மிஸ் செய்து விட்டாரே என அவரது ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர். மேலும் டிஎன்ஏ படத்தின் டிரைலர் பலரின் கவனத்தை பெற்றிருக்கிறது.