Suriya : சூர்யாவின் ரசிகர்கள் பெரிதும் காத்துக் கொண்டிருந்த படம் தான் வாடிவாசல். ஏனென்றால் அவர் தியேட்டரில் ஒரு மிகப்பெரிய வெற்றி கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. சமீபத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான கங்குவா படமும் மண்ணை கவ்வியது.
அடுத்ததாக ரெட்ரோ படம் வெளியான நிலையில் அதுவும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இதை அடுத்து இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.
இந்த சூழலில் பல வருடங்களுக்கு முன்பே வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணி உறுதியானது. ஆனால் சில காரணங்களினால் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே போன நிலையில் இப்போது படம் டிராப் ஆகிவிட்டது. இதற்கான காரணமாக சில கூறப்படுகிறது.
வாடிவாசல் படம் டிராப்பானதற்கான காரணம்
அதாவது வாடிவாசல் படத்தில் அமீரை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வெற்றிமாறன் நடிக்க வைக்க முன்வந்துள்ளார். ஆனால் பருத்திவீரன் பிரச்சனையால் இந்த படத்தில் அமீர் நடிக்க சூர்யாவுக்கு விருப்பமில்லாமல் இருந்துள்ளது.
ஆகையால் அமீரை படத்திலிருந்து விலக்க பல முயற்சிகள் சூர்யா மேற்கொண்டு உள்ளார். ஆனால் இதில் வெற்றிமாறன் அமீரை நடிக்க வைப்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். இதை அடுத்து சூர்யா வாடிவாசல் படத்திற்கான கால்சூட் எத்தனை நாட்கள் என்று கேட்டுள்ளார்.
அதோடு படத்தை எப்போது எடுத்து முடிப்பீர்கள் என்று சரியாக சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் பொதுவாகவே வெற்றிமாறனின் படங்கள் நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். ஆகையால் வெற்றிமாறன் சரியான டேட் கொடுக்காததால் படம் டிராப் ஆகிவிட்டது.