மனோபாலாவிற்கு லியோ டீம் செய்யப் போகும் சம்பவம்.. லோகேஷுக்கு கட்டளை போட்ட தளபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார் விஜய். இப்படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான சம்பவம் காத்துக் கொண்டிருக்கிறது.

தன்னிடமிருந்த பல திறன்களை கொண்டு தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் மனோபாலா. இவர் ஒரு காமெடி நடிகர் என்பது அல்லாது சிறந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்.

இத்தகைய கலைஞர் தற்பொழுது நம்மை விட்டு பிரிந்தார் என்பது வேதனைக்கு உள்ளான செய்தி. இது போன்ற பிரபலங்களை இழந்து நிற்கின்றது தமிழ் சினிமா. மேலும் இவர் லியோ படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை மீறி இவருக்கு தற்பொழுது ஏற்பட்ட சம்பவம் துயரத்தை உண்டாக்குகிறது. இவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் விஜய்யை பெருமையாக பேசியதுண்டு. மேலும் மனோபாலாவிற்கு விஜய்யின் மீது ஒரு நல்ல அபிப்ராயம் இருந்து வருகிறது.

அந்த வகையில் படத்தில் இவர் இடம்பெறும் காட்சிகளை குறைக்கும் எண்ணத்தில் இருந்திருக்கிறார் லோகேஷ். ஆனால் அதற்குள் இவர் மரணம் சம்பவித்ததால் அதை அறிந்த விஜய் அவரின் காட்சிகள் அனைத்தும் இடம்பெற வேண்டும் என்று லோகேஷுக்கு கட்டளை போட்டிருக்கிறார்.

இது இவர் மனோபாலா மீது கொண்ட மரியாதை நிமித்தமாக செய்யும் செயலாக கருதப்படுகிறது. இவரின் இத்தகைய சிறப்பான சம்பவம் லோகேஷை ஆச்சரியப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. மேலும் இவரின் இறப்பை அறிந்த விஜய் தன் இரங்கலை தெரிவிக்க விரைந்து முன் சென்றது குறிப்பிடத்தக்கது.