முதல்நாள் புக்கிங் வசூல் விவரம்.. வாரிசை முந்தியதா துணிவு.?

2014 ஆம் ஆண்டு வெளியான வீரம், ஜில்லா படத்திற்கு பிறகு இந்த வருட பொங்கல் அன்றுதான் மீண்டும் தல, தளபதி படங்கள் திரையரங்கில் மோதிக் கொள்கிறது. எனவே 8 வருடங்களுக்குப் பிறகு யார் ரேசில் ஜெயிப்பார்கள் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அஜித்தின் துணிவு ஜனவரி 11-ம் தேதியும், வாரிசு ஜனவரி 12 ஆம் தேதியும் ரிலீசாகவதால் திரையரங்குகளில் டிக்கெட் தாறு மாறாக விற்பனை ஆகிறது. அதிலும் இப்போது வாரிசு மற்றும் துணிவு படத்தின் முதல் நாள் புக்கிங் எவ்வளவு என்பதும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே திரை விமர்சனங்கள் பலரும் சொன்னபடி தமிழகத்தில் அஜித் தான் வசூல் நாயகன் என்பதை இந்த முதல் நாள் புக்கிங் விவரம் மீண்டும் ஒருமுறை பூஜிதப்படுத்தி இருக்கிறது. இதுவரை வாரிசு ரூபாய் 1 கோடியே 97 லட்சத்தை முதல் நாள் புக்கிங் செய்திருக்கிறது.

வாரிசுக்கு ஒரு படி மேலே சென்று அஜித்தின் துணிவு ரூபாய் 2 கோடியே 77 லட்சத்தை முதல் நாள் புக்கிங் மூலம் வசூல் செய்திருக்கிறது. ஆனால் அஜித் எப்படி தமிழகத்தில் மாஸ் காட்டுகிறாரோ! அதேபோல் உலக அளவில் விஜய்யும் மாஸ் காட்டுகிறது.

ஆகையால் வாரிசு மற்றும் துணிவு படங்களை பொருத்தவரை தமிழகத்தில் துணிவு தான் அதிக வசூலை குவிக்கும் என்றும் ஒட்டுமொத்தமாக வாரிசு வசூலில் முன்னிலை வகிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு ஜுனரில் இருப்பதால், 2 படங்களையும் பொங்கலுக்கு பார்க்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.

ஏனென்றால் வாரிசு பக்கா குடும்ப செண்டிமெண்ட் படமாகவும், துணிவு இளசுகள் விரும்பும் கேங்ஸ்டர் அதிரடி திரைப்படம் ஆகவும் உருவாகி உள்ளது. ஆகையால் இந்த இரண்டு படங்களும் நிச்சயம் பொங்கல் அன்று திரையரங்குகளை ரணகளமாக்கப் போகிறது.