வாடிவாசல் படம் டிராப் ஆனது தான் இப்பொழுது கோடம்பாக்கத்தில் பரபர பேச்சு. வெற்றிமாறன், கலைப்புலி எஸ் தானு, சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த இந்த படத்தை இப்பொழுது வேண்டாம் என ஒதுக்கி விட்டனர். இதற்கு முக்கிய காரணமாக சில விஷயங்கள் கூறப்படுகிறது.
வெற்றிமாறனை பொறுத்தவரை ஒரு படத்தின் தொடக்கம் மட்டும் தான் அவர் மனதில் இருக்கும். அதை எப்பொழுது முடிப்பார் என்பது அவருக்கே தெரியாது. எந்த ஒரு கதையிலும் 200 சதவீதம் திருப்தி எதிர்பார்க்கக் கூடியவர் வெற்றிமாறன். அப்படித்தான் இன்று வரை அவரின் ப்ராஜெக்ட் இருந்துள்ளது.
4 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட படம் ஆறு முதல் எட்டு கோடியில் வந்து நிற்கும். மூன்று மாதம் கேட்ட கால் சீட் ஒரு வருடம் கூட செல்லும். இப்படித்தான் வெற்றிமாறனை நம்பி எதையும் உறுதியாக செய்ய முடியாது. இதற்கு சரியான உதாரணம் விடுதலை 2 படம் தான். இந்த படத்திற்காக அவர் இரண்டு வருடங்களுக்கு எடுத்துக் கொண்டார்.
இப்பொழுது சூர்யா வெற்றிமாறனுக்கு பழக்கமே இல்லாத ஒரு விஷயத்தை அவரிடம் கேட்கிறார். வாடிவாசல் படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதுவும் போக இந்த படம் ஆரம்பிக்கும் நாளையும், முடியும் நாளையும் கரெக்டாக சொல்லுமாறு கேட்டுள்ளார். ஒரே பாகத்தோடு இந்த படம் முடிய வேண்டும் எனவும் கட்டளை போட்டுள்ளார்.
வாடிவாசல் படத்தில், இயக்குனர் அமீருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்துள்ளார் வெற்றிமாறன். ஏற்கனவே சூர்யாவிற்கும், அமீருக்கும் பல மனக்கசப்புகள் இருந்து வருகிறது. இதனால் நடிப்பு என்ற பெயரில் சூர்யாவிற்கு அமீருடன் ஒத்து போக மனமில்லை. சூர்யாவின் இந்த ஈகோவும் ஒரு வகையில் வாடிவாசல் நின்று போனதற்கு காரணம்.