விஜய்யை சந்தித்த முதலமைச்சர்.. பல முனை போட்டி நிலவ வாய்ப்பு!

சினிமாவை சார்ந்த நடிகர், நடிகைகள் தற்போது அரசியலில் இறங்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கமல் சென்ற ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்தார்.

அதேபோல் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 இடங்களில் போட்டியிட்டு 129 இடங்களில் வெற்றி பெற்றனர்.

தற்போது தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சியில் விஜயின் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளது. பல்வேறு தரப்பினர் விஜய் மக்கள் இயக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

vijay rangaswamy
vijay rangaswamy

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீரென நேற்று மாலை நடிகர் விஜய் சந்தித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரமாக சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

vijay rangasamy
vijay rangasamy

இப்போது நடக்க உள்ள நகர்ப்புறத் ஊராட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி, பெயர் ஆகியவை பயன்படுத்தலாம் என்று நிர்வாகிகளுக்கு இக்கட்சியின் இயக்கத்தின் தலைமை அறிவித்துள்ளது. ஏற்கனவே பல கட்சிகள் பிளவுபட்டுள்ளது.

இதனால் தற்போது விஜய் மக்கள் இயக்கமும் தேர்தலில் களம் காண்பதால் பல முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது. இதனால் புதுச்சேரி முதல்வர் மற்றும் விஜயின் சந்திப்பது மரியாதை நிமித்தமாக எனக் கூறப்பட்டாலும் அரசியல் வட்டாரங்களில் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.