எப்படியாவது ராஜமௌலி இயக்கத்தில் நடித்து விட வேண்டும் என்பது பல பெரிய நடிகர்களின் கனவு. ஆனால் அவர் தமிழ் மொழியில் நடிகர்களை தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் சற்று ஆச்சரியமானதாக இருக்கும். அப்படித்தான் தமிழில் இரண்டு நடிகர்களை குறி வைத்து தூக்கினார்.
சத்யராஜ்: பாகுபலி கட்டப்பா கதாபாத்திரத்தை இவரை விட்டால் வேறு யாரையும் அந்த இடத்தில் வைத்து யோசித்துப் பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு கதையோடு பொருந்தி செமையாக செய்து முடித்தார். சத்யராஜ் விஷயத்தில் ராஜமௌலியின் செலக்சன் அற்புதமாகவே இருந்தது.
சமுத்திரக்கனி: இவரும் ராஜமௌலிக்கு ரொம்ப பிடித்த நடிகர். அவர் தாமாகவே முன்வந்து சமுத்திரகனிக்கு RRR படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்திருந்தார். இந்த படத்திற்கு தன்னுடைய சொந்த செலவில் போய் நடித்து கொடுத்தார் சமுத்திரக்கனி. இந்த பண்பே ராஜமௌலியை மிகவும் கவர்ந்து விட்டதாம்.
இப்பொழுது தமிழில் அடுத்த ஒரு நடிகரை குறி வைத்துள்ளார் ராஜமவுலி. நடிகர் விக்ரமை ஆறு மாதத்திற்கு முன்பாகவே சந்தித்துள்ளார். தன்னுடைய படத்தில் அவரை நடிக்க வைப்பதற்காக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஆனால் இதற்கு முற்றிலும் விக்ரம் மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.
தன்னுடைய படத்தில் விக்ரமை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கு அணுகியுள்ளார் ராஜமவுலி. இப்பொழுது தான் தனக்கு ஒன்று இரண்டு படங்கள் கை கொடுத்து வருகிறது. மீண்டும் வில்லன் கதாபாத்திரம் என்றால் அந்த இமேஜ் தொற்றிக் கொள்ளும். சமீப காலமாக அர்ஜுன் இப்படித்தான் நெகட்டிவ் ரோல் செய்து வருகிறார். அவரை நினைத்து இந்த கதாபாத்திரத்தை மறுத்துள்ளார் சியான்.