சீப்பான பில்டபுக்கு ஆசைப்படாத சியான்.. திறமைக்கேற்ற உயரம் அடையாதது ஏன் தெரியுமா?

Actor Vikram: சினிமாவை பொருத்தவரை நடிப்புக்கும், விடாமுயற்சிக்கும் பெயரெடுத்தவர் தான் சியான் விக்ரம். கடின உழைப்பால் மட்டுமே தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார். ஆனாலும் இவருடைய திறமைக்கேற்ப உயரத்திற்கு வந்துவிட்டாரா என்றால் அது இன்னும் கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

அதாவது இன்று சில நடிகர்கள், நாங்கள் தான் மாஸ் ஹீரோக்கள் என்று ஒரு சீப்பான பில்டப்புகளை வைத்துக் கொண்டு திரிகிறார்கள். எப்படி என்றால் இவர்களிடம் பேச கூடாது. அங்கே இப்படி நடந்து கொள்ளக் கூடாது. பொது இடங்களில் இப்படி இருந்தால் மட்டுமே மார்க்கெட் ரேஞ்ச் கூடும் என்று பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

அத்துடன் செயற்கையாக நடித்தால் தான் நமக்கு மரியாதை என்று அவர்களுக்கு அவர்களே ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு பெரிய ஆட்கள் போல பாவித்து உலா வருகிறார்கள்.
இப்படிப்பட்ட இவர்களுக்கு மத்தியில் தனித்துவமான நடிப்பால் மட்டுமே எந்தவித பந்தாவும் காட்டாமல், பொய்யாக பேச தெரியாமல், இயல்பாக இருந்து வருகிறார் விக்ரம்.

அப்படிப்பட்ட இவர் அடைய வேண்டிய உச்சத்திற்கு இன்னும் போகாமல் அயராமல் உழைத்துக் கொண்டு வருகிறார். முழுக்க முழுக்க தன்னுடைய நடிப்பையும், கடின உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இதுவே இவருடைய வளர்ச்சிக்கு ஒரு தடை கற்களாக இருக்கிறது.

அதாவது பெரும்பாலான நடிகர்கள் தனக்கான இமேஜை அவர்களைத் தேடிக் கொண்டு அடைவதால் தான் என்னமோ உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். அதை போல் இவரால் இருக்க முடியாததால் இன்னும் இவருக்கான ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தத்தளித்து கொண்டு இருக்கிறார்.

ஆரம்பத்தில் என்னமோ இவர் நடித்த படங்கள் நன்றாகவே ஓடிய நிலையில் எல்லோரும் வியந்து பார்த்த நடிகராக வந்தார். ஆனால் போகப் போக இவர் நடித்து வந்த படங்கள் எதுவும் சரியாக ஓடாததால் அவ்வப்போது சோர்வாகி விடுகிறார். இருந்தாலும் தன்னை நிரூபிப்பதற்காக பல முயற்சிகளை எடுத்துக்கொண்டு வெற்றியைத் தேடி ஓடி வருகிறார். இவருடைய விடாமுயற்சிக்கு ஏற்ற பலன் கூடிய விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.