சிறப்பு கட்டுரைகள்

திரையரங்குகள் கொண்டாட மறந்த காவியம்.. OTT-யில் ரசிகர்களை அள்ளி குவித்த மாரீசன்!

By Vijay · 28 ஆக 2025 · Updated 07 மார்ச் 2026
Mareesan has garnered a huge fan following on OTT

Mareesan : சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகிய ‘மாரீசன்’ திரைப்படம், ஆரம்பத்தில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரிதாக சாதனை படைக்கவில்லை என்றாலும், தற்போது OTT பிளாட்ஃபார்மில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரசிகர்களை அள்ளி குவித்த OTT..

‘மாரீசன்’ படம் 2025 ஜூலை 25 அன்று திரையரங்குகளில் வெளியானது. அப்போது விமர்சகர்கள் மற்றும் சில ரசிகர்களிடையே படம் பாராட்டுகளை பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவுக்கு திரையரங்க ஓட்டம் கிடைக்கவில்லை. படம் சராசரியாக இரண்டு வாரங்களுக்கு (14 நாட்கள்) மேல் மட்டுமே திரையரங்குகளில் ஓடியது. ஆனால், வெளியாகி ஒரு மாதத்திற்குள் OTT-யில் வெளியானபின், இந்த படம் ரசிகர்களிடையே மீண்டும் பேச்சாக மாறியுள்ளது.

ஆண்களின் மனஅழுத்தத்தை வெளிப்படுத்தும் மாரீசன்..

‘மாரீசன்’ படத்தின் சிறப்பு, ஆண்களின் மன அழுத்தம், குடும்பச் சுமைகள், மற்றும் சமூக அழுத்தங்களை நேர்த்தியான கதை சொல்லும் பாணியில் சித்தரிப்பதே. ‘மெய்யழகன்’ பிறகு ஆண்களின் மனநிலையை இப்படியொரு தீவிரமாக சித்தரித்த படமாக மாரீசன் பேசப்படுகிறது. குறிப்பாக, படத்தில் வரும் உணர்ச்சி வசப்பட்ட காட்சிகள், யதார்த்தமான கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான நடிப்புகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

OTT பிளாட்ஃபார்மில் படம் வெளியானபின், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். “திரையில் சாதனை செய்யாத படம், மனதில் இடம் பிடிக்கிறது” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரைப்பட விமர்சகர்களும் இந்த படம் “நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் உணர்ச்சிவசப்பட்ட கதை” என்று பாராட்டுகின்றனர்.

இப்போது பலர் OTT பிளாட்ஃபார்ம்கள் மூலம் மட்டுமே படங்களைப் பார்க்கும் சூழலில், ‘மாரீசன்’ அந்த தருணத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. படம் திரையரங்கில் ஓடிய நாட்களை விட OTT-யில் அதிக பார்வையாளர்களை பெற்றிருப்பது தமிழ் சினிமாவுக்கே பெருமையாகும்.

நல்ல கதையை கொண்டாடும் மக்கள்..

‘மாரீசன்’ படத்தின் வெற்றியால், நல்ல கதை கொண்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸ் சுமையை மீறி ரசிகர்களிடம் சேர முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த படம், தமிழ் சினிமாவில் உணர்ச்சி மற்றும் யதார்த்தத்தை இணைக்கும் படைப்பாக ரசிகர்களின் மனதில் நீண்டநாள் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. நல்ல கதை கொண்ட படமும் திரையரங்கம் சப்போர்ட் இல்லாமலும் OTT வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்துள்ளது.