Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், என்னதான் நடக்கிறது என்று புரியாத புதிராகத்தான் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சமயத்தில் சக்தி நல்லவனாக மாறுகிறார், கதிர் திருந்துவது போல் தெரிகிறது. இன்னொரு பக்கம் இவர்கள் வாலை நிமித்தவே முடியாது என்பதற்கு ஏற்ப மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.
அப்படிப்பட்ட இவர்களை நம்பி ஏன் இன்னும் அந்த நான்கு மருமகள் குணசேகரன் வீட்டில் இருந்து குப்பை கொட்டி வருகிறார்கள். எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு பங்க்ஷன் பிரச்சனை என்று இதையே தான் கொண்டு வருகிறார்கள். இதைத் தவிர இயக்குனருக்கு வேறு கதையே தெரியாது போல என நெட்டிசன்கள் விமர்சனம் செய்யும் அளவிற்கு மொக்கையாக போய்க் கொண்டிருக்கிறது.
எதிர்நீச்சல் முதல் பாகத்தில் ஆதிரை கல்யாணம், தர்ஷினி கல்யாணம் இத வச்சு ஓட்டினாங்க. இப்பொழுது தர்ஷனுக்கு கல்யாணம், குணசேகருக்கு மணி விழா மற்றும் இப்பொழுது தாராவுக்கு சடங்கு பங்க்ஷன் வைத்து ஓட்டுகிறார்கள். இதுல புதுசாக வந்த அறிவுக்கரசி சம்பந்தமே இல்லாமல் அசிங்கப்பட்டு கொண்டே வருகிறார்.
குணசேகருக்கு மணிவிழா ஏற்பாடு பண்ணும் பொழுது அறிவுக்கரசியை கூப்பிடாமலேயே அசிங்கப்படுத்தினார்கள். இப்பொழுது தாரா பங்ஷனுக்கு முறை செய்வதற்கு கதிர், அறிவுக்கரசியை கூப்பிட்டு அசிங்கப்படுத்தி விட்டார். ஆனாலும் சூடு சொரணை இல்லாமல் அறிவுக்கரசி, கதிர் பின்னாடியே சுற்றி வருகிறார்.
இதற்கிடையில் நெடுஞ்செழியனை பங்க்ஷனுக்கு முறை செய்யவிடாமல் ஆக்க வேண்டும் என்பதற்காக கதிர் அடியாட்களை வைத்து, நந்தினி தம்பியை கடத்தினார். அப்படி கடத்திய பொழுது நெடுஞ்செழியனுக்கு யார் நம்மளை கடத்த சொன்னார் என்ற விஷயம் தெரிந்து விட்டது. அதனால் நிச்சயம் கதிருக்கு நெடுஞ்செழியன் நந்தினி மூலம் ஆப்பு வைப்பார்.
இதுல அவ்வப்போது சக்தி, அன்னியன் ரெமோ அம்பியாக மாறிக் கொண்டு வருகிறார். இப்ப என்ன ரகத்தில் இருக்கிறார் என்று தெரியாத அளவிற்கு தான் சக்தி கேரக்டர் போகிறது. அதே மாதிரி தான் தர்ஷன் கேரக்டரும் அமைந்து வருகிறது. இதில இயக்குனர் எப்படி அடுத்து கதையை கொண்டு போக வேண்டும் என்று தெரியாமல் இஷ்டத்துக்கு கதையை நகர்த்திக் கொண்டு வருகிறார். அதனால் தான் டிஆர்பி ரேட்டிங்கில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது.