4வருஷமாக இழுத்தடிக்கும் சன் டிவி சீரியல்.. முடிக்காமல் இழுத்தடிப்பதற்கு காரணம் இதுதான்

Serial: ஒரு காலத்தில் சன் டிவியில் வரும் சீரியல்கள் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றதால் அதை பல வருஷமாக கொண்டு வந்தார்கள். அதே நேரத்தில் எந்த சீரியல்கள் மகளிடம் நெகட்டிவ் விமர்சனங்களை பெறுகிறதோ அதை உடனடியாகவும் முடித்து விடுவார்கள். ஆனால் தற்போது எல்லாம் தலைகீழ மாறிவிட்டது.

மக்களுக்கு பிடிக்குதோ இல்லையோ, நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் பரவாயில்லை என்று பல வருஷங்களாக சில சீரியல்கள் இழுவையாக போய்க்கொண்டிருக்கிறது. அதுவும் ப்ரைம் டைம் சீரியல் கூட மொக்கை வாங்கிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் நாலு வருஷமாக வரும் கயல் சீரியல் தொடர்ந்து கதையை இல்லாமல் அரைச்ச மாவை அரைத்துக் கொண்டு வருகிறார்கள்.

கயல் என்றாலே பிரச்சினைதான், எந்த குடும்பத்திலும் பிரச்சினை மட்டுமே இருக்கும் படி வாழ்க்கை இருக்காது. ஆனால் கயலில் மட்டும் பிரச்சனைக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு தொடர்ந்து ஏகப்பட்ட சிக்கல்கள் வருகிறது. கயல் என்று பெயர் வைப்பதற்கு பதிலாக பிரச்சனை என்று வைத்து இருக்கலாம் என மக்கள் தொடர்ந்து கலாய்த்து வந்தார்கள்.

அதிலும் இந்த சீரியலை தயவு செய்து முடித்துவிட்டு அதற்கு பதிலாக வேறு சீரியலை கொண்டு வாங்க என்று வேண்டுகோள் வைத்தார்கள். அப்படி இருந்தும் சன் டிவி சேனல் ஏன் கயல் சீரியலை முடிக்காமல் இழுத்து அடிக்கிறார்கள் என்பது இப்பொழுதுதான் புரிந்தது. அதாவது என்னதான் மக்கள் கழுவி ஊத்தினாலும் பார்க்கக்கூடிய மக்கள் பார்த்துக் கொண்டுதான் வருகிறார்கள்.

அதனால்தான் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் சிங்க பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு சீரியலை பின்னுக்கு தள்ளி கயல் சீரியல் முதல் இடத்தை அடைந்திருக்கிறது. அதனால் இப்போதைக்கு இந்த சீரியலை முடிப்பதற்கு வாய்ப்பே இல்லை.