சினிமா செய்திகள்

இவரை நம்பி பிரயோஜனம் இல்லை.. கொஞ்சம் கொஞ்சமாக கமலை விட்டு ஒதுங்கும் பிரபலங்கள்

By Thenmozhi · 28 மே 2022
kamalhaasan

தமிழக அரசியலில், திரைப்படத் துறையில் இருந்து எம்.ஜி.ஆர், மு கருணாநிதி இவங்க வரிசையில் அரசியல் பயணத்தை தொடங்கியவர் கமல்.திரையில் மறைமுக பேசி வந்த அரசியலை விட்டு, நேரடியாக அரசியல் குதித்தார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் தனது முதல் அரசியல் கட்சி கூட்டத்தை கூட்டி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

கட்சியை தொடங்கிய ஒரு வருடத்தில் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டார் முதல் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று, தோல்வியை தழுவினாலும் மக்கள் நீதி மையம் 3.7% சதவீத வாக்குகளைப் பெற்றார்.2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி உட்பட சில கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு, தோல்வியை தழுவினார்.

கமல் அரசியல் ஆரம்பம் நேரம் சரியில்லை, அடுத்தடுத்து தோல்வியைத் தழுவிய அவர், அரசியலை விட்டு திரைத்துறை ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவரே ராஜ்கமல் பிலிப்ஸ் நிறைய படங்கள் பெற்று வருகிறது.

இந்நிலையில் கமல் அரசியல் சரிப்பட்டு வரமாட்டார் இனி இவரை நம்பி பிரயோஜனம் இல்லை என்று அவள் கட்சியை உள்ள பிரபலங்கள் ஒவ்வொன்றாக கட்சியை விட்டு விலகி வருகின்றனர். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் விஜயின் தளபதியின் 68 , சூர்யா, ஜெயம் ரவி படங்களும் மற்றும் இயக்குனர் முத்தையாவின் ஒரு படமும் தயாரிக்க இருப்பதாகவும் கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் கமல் ரசிகர்கள் உலக நாயகனாக தியேட்டரில் பார்க்க விரும்புகிறார்கள் தவிர மக்கள் நீதி மைய தலைவராக மேடையில் பார்க்க விருப்பம் இல்லையாம்.