கோலிவுட்டில் பல வருடங்களாக கெத்தை அப்படியே மெயின்டைன் செய்தும் 5 நடிகைகள் எப்போதும் ரசிகர்களின் ஃபேவரிட் நடிகைகளின் லிஸ்டில் உள்ளனர். அதிலும் பொன்னியின் செல்வனின் குந்தவை திரிஷா இப்போதும் மவுஸ் குறையாமல் இருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன்: மேகியாக ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். மேலும் படையப்பா படத்தில் நீலாம்பரியாக மிரட்டி இருந்தார். பாகுபலி படத்தில் இவரது சிவகாமி தேவி காப்பாத்திரத்தில் ராஜமாதாவாக பாராட்டப்பட்டது. 52 வயதில் அரை கிளவி ஆனாலும் இவருக்கு இப்போதும் இவருக்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் உள்ளது.
சிம்ரன்: 46 வயதான இவர் இப்போதும் விஜயுடன் துள்ளாத மனமும் துள்ளும் என்ற படத்தில் இருந்த அதே அழகை மெயின்டெயின் செய்து கெத்து குறையாமல், தப்போதும் தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் இவர் இந்த வருடம் ரிலீஸ் ஆன ராக்கெட்ரி படத்தில் மாதவனுக்கு ஜோடியாகவும் நடித்த கலக்கி இருப்பார்.
ஜோதிகா: தமிழ் தெலுங்கு ஹிந்தி படங்களில் டாப் ஹீரோயினாக வலம் வந்த இவர், 2006 ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே படத்திற்கு துவங்கிய ஜோதிகா 44 வயதிலும், தற்போது தொடர்ந்து கதாபாத்திரம் வலுவாக பேசப்படும் படங்களில் கெத்து குறையாமல் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
அனுஷ்கா ஷெட்டி: அனுஷ்கா டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு பல படங்களில் நடித்துள்ளார். இவர் பாகுபலி படத்திலேயே தனது துணிச்சலான நடிப்பை வெளிக்காட்டி அனைவரது பாராட்டையும் பெற்றார். மேலும் அருந்ததி படத்தில் வால் வீச்சு சண்டை காட்சியில் நடித்து அசத்து இருந்தார். 41 வயதான அனுஷ்கா ஷெட்டி இப்போதும் கொடுக்கும் இடத்தில் லூசு குறையாமல் இருக்கிறார்.
திரிஷா: 39 வயதிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத திரிஷா இப்போதும் மவுஸ் குறையாமல் ரசிகர்களின் கனவு கனியாகவே வலம் வருகிறார். அதிலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக பேரழகியாகவே காட்சியளித்தார்.
இவ்வாறு இந்த 5 நடிகைகளும் அரை கிழவி ஆனாலும் தங்களுடைய அழகை அப்படியே மெயின்டைன் செய்து கெத்து குறையாமல் தமிழ் சினிமாவில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக என்று கொடுத்த திரிஷாவின் அழகு இப்போதும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.