Adithi Shankar: தென்னைய பெத்தா இளநீர், பிள்ளையைப் பெத்தா கண்ணீர் என்று சொல்வார்கள் இது பல வீடுகளுக்கு பொருந்தும். அதிலும் சினிமாக்காரர்களின் வீடு என்றால் அது பெரிய அளவில் பேசப்படும்.
அப்படி பிள்ளைகள் யோசிக்காமல் செய்த காரியத்தால் பொது வெளியில் ட்ரோல் செய்யப்பட்ட ஆறு திரை நட்சத்திரங்களை பற்றி பார்க்கலாம்.
நொந்து போன 5 பெரும் ஆளுமைகள்
வாசு: ரஜினி, கமல் போன்ற பெரிய ஆளுமைகளை இயக்கி பெற்றுக் கொண்டவர் இயக்குனர் வாசு. இவருடைய மகன் சக்தி வாசு தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.
மது அருந்திவிட்டு கார் ஓட்டி வந்த சக்தி நிதானம் இல்லாமல் காரில் இருந்து இறங்கி தள்ளாடியபடி, சுயநினைவு இல்லாமல் பேசிய வீடியோ பெரிய அளவில் வைரல் ஆகியது.
விஜயகுமார்: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர குடும்பமாக இருப்பது விஜயகுமார் குடும்பம். விஜயகுமார் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் வனிதா விஜயகுமாருக்கு அவருடைய குடும்பத்துடன் மனக்கசப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் தன்னுடைய குடும்பத்தை பற்றி நிறைய தவறான விஷயங்களை தொடர்ந்து பேட்டி அளித்து வந்தார்.
அதிதி ஷங்கர்: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பெரிய ட்ரோல் மெட்டீரியல் ஆனார்.
இதற்கு இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் அதிதி சங்கர் பாட்டு பாடியது தான் காரணம். ஒரே நேரத்தில் மேடையில் ஸ்ருதிஹாசன் மற்றும் அதிதி பாடினார்கள். இதில் அதிதி பாடியது பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்தது.
ரஜினிகாந்த்: ரஜினிகாந்த்திற்கு எப்போதுமே அவருடைய குடும்பத்தை வைத்து சங்கடம்தான் என்பது அவருடைய ரசிகர்களின் கருத்து.
போதாத குறைக்கு லால் சலாம் படம் ரிலீஸ் ஆன பிறகு முக்கியமான புட்டேஜ் தொலைந்தது தான் படத்தின் தோல்விக்கு காரணம் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொல்லியிருந்தார். இந்த சமயத்தில் ரஜினி சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டார்.
சிவகுமார்: தமிழ் சினிமா ரசிகர்களிடையே பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் குடும்பம் பெரிய அளவில் பெயர் வாங்கி இருக்கிறது.
இவர் பிள்ளைகளால் எந்த ஒரு கேலிக்கும் ஆளானதில்லை. ஆனால் ஜோதிகா நாச்சியார்புரம் படத்தில் கெட்ட வார்த்தை பேசும் ட்ரெய்லர் வெளியானது. அந்த சமயத்தில் சிவகுமாரை சமூக வலைத்தளத்தில் ரொம்பவும் கேலிச்சித்திரம் ஆக்கினார்கள்.