மேடையிலேயே கதறி அழுத 5 நடிகர்கள்.. தனுஷை கலாய்கிறதுக்கு முன்னாடி இந்த லிஸ்ட்டை தெரிஞ்சுக்கோங்க!

Dhanush: குபேரா ஆடியோ வெளியீட்டு விழாவின் போது தனுஷ் பேசிய விஷயம் பயங்கர கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. தனக்கு எதிரி இருப்பது போல் நினைத்துக் கொண்டு ரசிகர்களை தூண்டி விடுவது ஒரு விதம்.

இதில் இன்னொரு வகை இருக்கிறது. ரசிகர்களிடம் கண்ணீரும் கம்பலையுமாக நிற்பது. அப்படி பட பிரமோஷன் விழாவில் மேடை என்றும் பாராமல் கதறி அழுத ஐந்து நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

கதறி அழுத 5 நடிகர்கள்

சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் மேடையில் அழுவதை பலமுறை பார்த்திருக்கிறோம். அதில் ஒன்றுதான் ரெமோ பட விழாவின் போது நடந்தது.

தன்னை படத்தில் நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் எனவும், இனி என்னால் பொறுமையாக இருக்க முடியாது என்றும் கண்கலங்கி பேசியிருப்பார். அவர் அழுது பேசிக்கொண்டிருக்கும் போது பின்னால் கீர்த்தி சுரேஷ் சிரிப்பது கூட பெரிய அளவில் வைரலானது.

சிம்பு: நடிகர் சிம்பு எப்போதுமே கொஞ்சம் எமோஷனலான டைப். அப்படித்தான் மாநாடு பட சமயத்தில் தான் உடல் எடை குறைப்பது பற்றியும் ரசிகர்கள் பற்றியும் கண்கலங்கி பேசியிருப்பார். அதே மாதிரி தக்லைஃப் பட விழாவின் போதும் கண்கலங்கி இருந்தார்.

சூரி: நடிகர் சூரி மாமன் பட விழாவின் போது ரொம்ப எமோஷனலாக பேசியிருப்பார். அவர் திருப்பூரில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கே பால்பன் ரொம்பவும் சுவையாக இருக்கும்.

ஆனால் அதை வாங்க தன்னிடம் காசு இருக்காது. அப்படிப்பட்ட நான் இந்த இடத்திற்கு வந்தது ரசிகர்கள் நீங்கள் தான் காரணம் என கண்கலங்கி பேசியிருந்தார்.

மாஸ்டர் மகேந்திரன்: குழந்தை நட்சத்திரமாக வெற்றி பெற்ற தன்னால் ஹீரோவாக ஜொலிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் மகேந்திரனுக்கு எப்போதுமே உண்டு.

AMIGO Garage என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இந்த படத்தை உருவாக்கவும் ரிலீஸ் செய்யவும் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதை கண்ணீர் சிந்தி பேசி இருப்பார்.

சமந்தா: நடிகை சமந்தா மையோசைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிறகு யசோதா பட விழாவில் தான் ரசிகர்களை சந்தித்தார். அப்போது தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய் அதனால் தான் படும் கஷ்டங்கள் பற்றி ரொம்ப எமோஷனலாக பேசியிருந்தார்.