5 டாப் ஹீரோக்களை மேடையிலேயே பங்கம் பண்ணிய அப்பாக்கள்.. தனுஷ் மீது செம காண்டில் இருக்கும் கஸ்தூரிராஜா

Dhanush: எவ்வளவுதான் வயதானாலும் பெற்றவர்களுக்கு நாம் பிள்ளைகள். தான் அதே மாதிரி தான் எவ்வளவு பெரிய உச்சத்திற்கு சென்றாலும் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கு அவர்கள் எப்போதுமே குழந்தைகளாகத்தான் தெரிவார்கள்.

அப்படி தங்களுடைய பிள்ளைகள் மிகப்பெரிய உச்ச நட்சத்திரங்களாக இருக்கிறார்கள் என்பதை மறந்த அப்பாக்கள் மேடையிலேயே பங்கம் பண்ணிய ஐந்து சம்பவங்களை பற்றி பார்க்கலாம்.

ஹீரோக்களை மேடையிலேயே பங்கம் பண்ணிய அப்பாக்கள்

விஜய்: எஸ் ஏ சந்திரசேகர் ஒரு மேடையில் ஆரம்ப காலத்தில் யாருமே விஜய் ஹீரோவாக ஏற்கவில்லை என்ற உண்மையை போட்டு உடைத்திருப்பார். அதே மாதிரி ஒரு மேடையில் விஜய் தனக்கு மிகப்பெரிய இயக்குனரை தான் புக் பண்ண வேண்டும்.

மேலும், டாப் ஹீரோயின் தான் தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என அப்பாவிடம் அடம் பிடித்ததை விஜய் முன்னிலையிலேயே சொல்லி இருப்பார். அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விஜய் அசடு வழிய சிரித்தது பெரிய அளவில் பேசப்பட்டது.

சூர்யா: பழம்பெரும் நடிகர் சிவகுமார் மேடையில் சில நேரங்களில் தன்னுடைய மகன்களையே டேமேஜ் பண்ணி விடுவார். அப்படித்தான் சூர்யாவுக்கு லயோலா கல்லூரியில் அட்மிஷன் கிடைக்காமல் அலைந்தது பற்றி ஒரு மேடையில் பேசியிருப்பார்.

மேலும் அவ்வளவு கஷ்டப்பட்டு சீட்டு வாங்கி கொடுத்தோம் சூர்யா டிகிரி வாங்கவில்லை என்றும் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்து இருப்பார்.

கார்த்தி: சிவக்குமார் குடும்பம் முழுக்க சினிமாவில் இருப்பதால் அவர் எந்த மேடை ஏறினாலும் மகன்கள் மற்றும் மருமகள் பற்றி கேள்வி வரும்.

அப்படித்தான் விருது விழா வழங்கும் விழா மேடை ஒன்றில் நடிகர் கார்த்திக்கு பெண் தேடி அலைந்து கொண்டிருப்பதாகவும், யாருமே பெண் கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் பேசி இருப்பார்.

மன்சூர் அலிகான்: தன்னுடைய எதார்த்த பேச்சால் சமீபத்தில் ரசிகர்களிடையே அதிக கவனத்தைப் பெற்றவர் மன்சூர் அலிகான்.

அவருடைய மகனை வைத்து சமீபத்தில் படம் ஒன்றை தயாரித்திருந்தார். அப்போது மகன் +2 படித்து முடித்து விட்டதாகவும் அவருக்கு படிப்பு வராததால் சினிமாவில் ஹீரோவாகிவிட்டதாகவும் நக்கலாக பேசியிருந்தார்.

தனுஷ்: தனுஷ் மீது அவருடைய அப்பா கஸ்தூரிராஜா செம காண்டில் இருக்கிறார் என்பது எல்லோருக்குமே தெரியும். தனுஷ் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தான் அவருடைய அண்ணன் செல்வராகவன் அவரை ஹீரோ ஆக்கினார்.

தனுஷின் கடின உழைப்பால் அவர் இப்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். அதே மாதிரி தனுஷ் அவருடைய அக்கா மகன் பவிஷை நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ஹீரோ ஆக்கினார்.

நன்றாக படித்துக் கொண்டிருந்த பையனை பள்ளியில் இருந்து பாதியில் நிறுத்திவிட்டு தனுஷ் ஹீரோ ஆக்கிவிட்டார் என கஸ்தூரிராஜா மேடையிலேயே ஆதங்கப்பட்டிருந்தார்.