Gautham Menon: ஆழம் தெரியாமல் காலை விடாதே என்று சொல்வார்கள். ஆனால் தன்னுடைய படைப்பின் மீது அதீத நம்பிக்கை கொண்டு அகலக்கால் வைத்து கடனில் விழுந்த நட்சத்திரங்கள் அதிகம்.
கடனை கட்ட முடியாமல் சினிமாவில் இருந்தே காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள். எப்படியாவது மீண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்த நட்சத்திரங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஐந்து பேர்களை பற்றி பார்க்கலாம்.
கேரியரை தலைகீழாய் மாற்றிய 5 நட்சத்திரங்கள்
விஜய் ஆண்டனி: இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி நான் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தன் ஹீரோவாக நடித்த படங்களை எல்லாம் தயாரித்த விஜய் ஆண்டனிக்கு தோல்விதான் மிஞ்சியது.
இதில் பிச்சைக்காரன் படம் அவருக்கு கை மேல் பலன் கொடுத்தது. இதை நம்பி பிச்சைக்காரன் 2 படத்தை பெரிய செலவில் தயாரித்தார்.
ஆனால் இந்த படம் அவரை கைவிட்டு விட்டது. இந்த கடனை எல்லாம் அடைப்பதற்காக தொடர்ந்து பாட்டு கச்சேரிகள் மற்றும் கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சந்தானம்: காமெடியனாக இருந்த சந்தானத்திற்கு ஹீரோ ஆசை வந்ததது தான் அவர் இந்த அளவுக்கு பிரச்சனைகளை சந்திக்க காரணம்.
ஏதோ ஒரு ஈகோவில் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை எல்லாம் தயாரித்து தலையில் துண்டு போட்டு அமர்ந்து விட்டார்.
இதில் டிடி ரிட்டன் அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. பேய் படங்கள் லாபம் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தற்போது அவர் எடுத்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம் சந்தானத்திற்கு விபூதி அடித்து விட்டது.
கௌதம் மேனன்: கௌதம் மேனன் தன்னுடைய கனவு படமான துருவ நட்சத்திரத்தை ரிலீஸ் செய்யப்படாத பாடுபட்டு வருகிறார். இந்த படத்தை நம்பி வாங்கிய கடனை அடைப்பதற்காக நடிகர் அவதாரம் எடுத்தார்.
இது அவருக்கு நல்ல நல்ல வாய்ப்புகளையும் கொடுத்தது. ஆனால் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இவர் நடித்தது எடுபடவில்லை.
ராஜகுமாரன்: இயக்குனர் மற்றும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரனுக்கு கடன் பிரச்சனை என்றெல்லாம் சொல்ல முடியாது.
சினிமா இயக்கும் வாய்ப்பு இல்லாத இவர் ஒரு புதிய முயற்சியாக களம் இறங்கியது தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
இதில் சந்தானம், ராஜகுமாரனை எந்த அளவுக்கு வச்சு செய்ய முடியுமா செஞ்சி இருப்பார். இது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என தேவையானியே பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.
எஸ் ஜே சூர்யா: எஸ் ஜே சூர்யாவுக்கு அவர் தன்னுடைய கேரியரை மாற்றியது பெரிய அளவில் வெற்றி முகம் என்று தான் சொல்ல வேண்டும்.
இயக்குனராக அவர் சாதிக்க முடியாததை நடிகராக பல மடங்கு சாதித்து விட்டார். ஆரம்ப காலங்களில் நியூட்டனின் மூன்றாம் விதி, இசை போன்ற படங்களை இயக்கியதுதான் இவரை படம் இயக்கும் முயற்சியில் இருந்து விலக வைத்தது.