கல்யாணமானவர்களையே குறிவைத்த நக்மா.. வலையில் விழுந்த 5 பிரபலங்கள்

நடிகை மற்றும் அரசியல்வாதியான நக்மா தற்போது 47 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் உள்ளார். ஆனால் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். அதில் கல்யாணமானவர்கள் உடன் தான் நக்மா அதிகமாக கிசுக்கப்பட்டுள்ளார். அவ்வாறு நக்மா வலையில் விழுந்த 5 பிரபலங்களை பார்க்கலாம்.

 சவுரவ் கங்குலி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலியுடன் நக்மா தீவிர உறவில் இருந்தார். இவர்கள் இருவரும் ஆந்திராவில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே கங்குலி திருமணமானவராகவும், கிரிக்கெட் கேப்டன் ஆகவும் இருந்தார். அதன் பின்பு இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

சரத்குமார் : சவுரவ் கங்குலியை பிரிந்த பிறகு சரத்குமாரை நக்மா காதலித்தார். அப்போது சரத்குமார் ஏற்கனவே திருமணம் ஆனவர். சரத்குமாரின் மனைவிக்கு இந்த விஷயம் தெரிந்தது உடன் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதனால் சரத்குமார் நக்மாவை பிரிந்தார். நக்மா தமிழ் சினிமாவை விட்டு விலகிவிட்டார்.

ரவி கிஷான் : தமிழ் சினிமாவில் இருந்த வந்த பிறகு மும்பையில் தனது திரைப்படத்தை தொடங்கினார். அப்போது போஜ்புரி சூப்பர் ஸ்டார் ரவி கிஷானுடன் நக்மா பல படங்களில் நடித்து வந்தார். மேலும் ரவி கிஷானும் ஏற்கனவே திருமணம் ஆனதாக செய்திகள் வெளியானது. அதன்பின்பு இந்த நட்சத்திர ஜோடிகள் பிரிந்து விட்டனர்.

அனீஸ் இப்ராஹிம் : மும்பையில் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் தம்பி தான் அனீஸ் இப்ராஹிம். இவர் நடிகை நக்மாவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் மூலம் நக்மாவிற்கு அனீஸ் நிறைய பணம் கொடுத்ததாக அப்போது செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

பிரபுதேவா : நக்மா, பிரபுதேவாவுடன் காதலன் படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்த இரண்டாவது முறையாக லவ் பேர்ட்ஸ் படத்தில் நடித்திருந்தார். அப்போது பிரபுதேவாவுக்கு திருமணம் ஆகி இருந்தது. இந்நிலையில் பிரபுதேவா உடன் நக்மா கிசுகிசுக்கப்பட்டார்.