3 celebrities who lost peace despite receiving high salaries: சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் அவர்களில் சில பேர் தான் பிரபலங்களாகவும், உச்ச நட்சத்திரங்களாகவும் மக்கள் மனதில் ஜொலித்து வருகிறார்கள். முக்கியமாக அவர்கள் தான் அதிகமாக சம்பளம் வாங்கக் கூடியவர்கள் என்றே சொல்லலாம். அந்த வகையில் ரஜினி, கமல் மற்றும் இயக்குனர் சங்கர் அதிகமான சம்பளத்தை வாங்கி வருகிறார்கள்.
அப்படிப்பட்ட இந்த மூன்று பிரபலங்களின் சினிமா வாழ்க்கை பிரகாசமாக ஜொலித்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் இவர்களுடைய பிள்ளைகளால் பெரும் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் கமல் மற்றும் ரஜினி இளம் ஹீரோவாக நடிக்கும் பொழுது நடிகைகளுக்கு கொடுத்த டார்ச்சரால் தான் தற்போது சாபக்கேடாக மாறிவிட்டது என்று பேசிக்கொள்கிறார்கள்.
ரஜினி: சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என இரண்டு பெண்களை பெற்று நல்ல இடத்தில் வாக்கப்பட்டு கொடுத்தாலும், ஒட்டுற மண்ணுதான் ஒட்டும் என்பதற்கு ஏற்ப ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் ரஜினிக்கு கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்து விட்டார்கள். அத்துடன் இரண்டு மகளுமே அப்பாவை வைத்து படம் எடுக்கிறேன் என்று பெயரில் போட்டி போட்டு ரஜினியை க்ளோஸ் செய்து வருகின்றனர்.
கமல்: அக்ஷரா ஹாசன் மற்றும் சுருதிஹாசன் என இரண்டு பிள்ளைகளை பெற்று நடிக்க வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் கடைசியில் சுருதிஹாசனால் அசிங்கப்பட்டது தான் மிச்சம். இதுல இரண்டு பேரும் மேரேஜ் பண்ணாமல் இஷ்டத்துக்கு ஊர் சுத்தி வருகிறார்கள். அதுலயும் சுருதிஹாசன் லவ் பண்றேன்னு பெயரில் கண்ணா பின்னான்னு மோசமாக அலைகிறார். ஆனாலும் இதையெல்லாம் கமல் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்.
சங்கர்: ஐஸ்வர்யா மற்றும் அதிதி சங்கர் என இரண்டு பிள்ளைகளை பெற்று, மூத்த மகளை கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா காலத்தில் திருமணத்தை செய்து வைத்தார். ஆனால் அவர் பண்ணிய தில்லு முல்லு வெளிவந்ததால் மூத்த மகள் கணவரைப் பிரிந்து விவாகரத்து வாங்கி விட்டார். பிறகு ஷங்கரின் அசிஸ்டன்ட் இயக்குனராக இருப்பவரை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு நேற்று நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்து விட்டார்.
இவர்கள் மூன்று பேரும் என்னதான் காசு பணம்னு சம்பாதிச்சு குவித்து போட்டாலும் சந்தோஷத்திற்கு தட்டுப்பாடாகத்தான் அலைகிறார்கள்.