செல்வராகவனை தூக்கி விட ரெடியாகும் பார்ட் 2 படங்கள்.. இயக்குனராக ரீ என்ட்ரி, நடிப்புக்கு குட் பாய்

கோலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். இவர் பணத்திற்காக என்று இல்லாமல் தன்னுடைய திருப்திக்காக படம் எடுப்பார். இதுதான் சினிமா ரசிகர்களுக்கு செல்வாவிடம் மிகவும் பிடித்த ஒன்று. ஆனால் இதுவே அவருடைய தோல்விக்கும் காரணம்.

செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான சமீபத்திய படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தி இருந்தாலும் பொருளாதார ரீதியாக சரிவையே சந்தித்தது. அடுத்தடுத்து வாய்ப்புகள் இல்லாமல் இவரும் நடிகராக மாறிவிட்டார். தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் முதன் முதலாக இவர் ஒரு நடிகராகவும் அவதாரம் எடுத்திருந்தார்.

அதன் பின்னர் நடிகர் தனுஷின் நானே வருவேன் திரைப்படத்திலும், பாகாசுரன் திரைப்படத்திலும் இவர் நடித்தார். ஒரு நடிகராகவும் செல்வராகவன் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இருந்தாலும் தற்பொழுது தனக்கு மிகப்பெரிய பிரச்சினைகள் இருப்பதாக சோசியல் மீடியாவில் ஏகத்துக்கும் புலம்பி தள்ளினார்.

சினிமாவின் மீது தாகம் கொண்ட செல்வராகவன் படங்களை இயக்க முடியாமல் உண்மையிலேயே தவித்து வந்தார். அவரின் தவிப்பை போக்குவது போல் செல்வராகவனின் டிரேட் மார்க் படமான 7ஜி ரெயின்போ காலணியின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்க இருக்கிறார்கள். இதை தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினமே உறுதி செய்து இருக்கிறார்.

செல்வராகவனின் தொடர் புலம்பலால் ரசிகர்களின் எக்கச்சக்க கேள்விகள் அவர் சகோதரரான நடிகர் தனுஷ் பக்கம் திரும்பியது. செல்வராகவனை தனுஷ் கைவிட்டு விட்டதாக கூட தகவல்கள் வெளியாகின. இப்பொழுது நடிகர் தனுஷ் புதுப்பேட்டை பார்ட் 2 படத்தின் கதையை ரெடி செய்ய கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார்.

செல்வராகவனுக்கு கோலிவுட்ல சிறந்த இயக்குனராக அடையாளம் கொடுத்த இரண்டு படங்களுமே தற்போது பார்ட் டூவுக்கு ரெடியாகி கொண்டிருக்கின்றன. இதனால் செல்வராகவனும் பழைய பார்முக்கு வந்து விட்டார். செல்வராகவனின் ரசிகர்களுக்கும் இந்த படங்களின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.