இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வருகிற ஜூன் 20ஆம் தேதி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஏற்கனவே அங்கே சென்று பயிற்சி ஆட்டத்தில் அட்டகாசமாக விளையாடி வருகிறது இந்தியா. 4 வருடங்கள் கழித்து கருண் நாயர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இரட்டை சதம் அடித்துள்ளார்.
இப்படி ஒரு பக்கம் நம்பிக்கையாக இந்திய அணி விளையாடினாலும் மறுபக்கம் பௌலிங் யூனிட்டில் சற்று மந்தமாக இருக்கிறது. பும்ராவை தவிர வேறு எந்த ஒரு பவுலரும் அந்த அணிக்கு அச்சுறுத்தலாக இல்லை. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓய்வுக்கு பின்னர் இந்திய அணி விளையாட போகும் முதல் வெளிநாட்டு தொடர் இது.
கடந்த ஆண்டு இந்தியா வந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தி மகுடம் சூடியது நமது அணி .இந்த முறை இந்தியா, இங்கிலாந்து சென்றுள்ளது. எதிர்பாராத முக்கிய வீரர்கள் இல்லாததால் இங்கிலாந்து அணிக்கே பலம் சற்று அதிகமாகவே இருக்கிறது. இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியும் பெரிய சவாலை எதிர்கொள்கிறது.
இப்பொழுது அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் இந்திய அணிக்கு வெளிப்படையாக சவால்கள் விட்டு வருகிறார். மூத்த வீரர்கள் இல்லாமல் இந்திய அணி வருவது எங்களுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கிறது.புதிதாய் வரும் வீரர்கள் இங்கிலாந்தின் பிட்ச் பற்றி தெரிந்துகொள்ள நாள் பிடிக்கும்.
அது போக எங்களிடம் வலுவான வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் பிரைடன் கார்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜேமி ஓவர்டன், சாம் குக் போன்றவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். இவர்களை வைத்து இந்திய அணியை எளிதில் வீழ்த்துவோம் என பயிற்சியாளர் மெக்கல்லம் பேட்டி கொடுத்து வருகிறார்.