கமலின் முத்த காட்சிக்கு எப்படி ஈடு கொடுப்பீங்க.. பேட்டியில் ஓப்பனாக போட்டுடைத்த ராதிகா

70, 80களில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவில் முக்கிய அங்கமாக இருந்து வரும் உலக நாயகன் கமல்ஹாசன் ரொமான்ஸுக்கு பெயர் போனவர் என்று அனைவருக்கும் தெரியும். இதனால் பிற நடிகர்களும் தங்களது படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பதை இவரைப் பார்த்தே ஆச்சரியத்துடன் கற்றுக் கொள்வார்கள்.

அந்த அளவிற்கு பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் அளவுக்கு கமலின் ரொமான்ஸ் இருக்கும். அதிலும் கமலுடன் சிற்பிக்குள் முத்து, பேர் சொல்லும் பிள்ளை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த ராதிகா கமலின் முத்த காட்சிக்கு எப்படி ஈடு கொடுத்தார் என்பதை சமீபத்திய பேட்டியில் ஓபன் ஆக போட்டு உடைத்திருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் ராதிகாவிடம், கமல் உடனான முத்தக் காட்சியை பற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு ராதிகா அவர் எந்த நடிகையும் விட்டு வைக்க மாட்டார். அனைவரிடமும் நடிக்கும்போதும் ரொமான்ஸில் பீச்சு உதறுவார். அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் கூடநடிக்கும் நடிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க வேண்டிய நிலை இருக்கும்,

அவரிடம் கழுதையை கொடுத்தால்கூட கழுதைகளிடமும் ரொமான்ஸ் செய்யும் நடிகன். ஏனென்றால் ரொமான்ஸ் காட்சிகள் தான் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும், அதுதான் படத்தின் ஹைலைட் என்பதையும் கமலஹாசன் ஆணித்தரமாக நம்பக்கூடியவர்.

அதுமட்டுமின்றி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் காட்சி எடுக்கும் போது எந்த பதட்டமும் இல்லாமல் நடிப்பார் கமல். உடனே கட் சொன்னார் கூட ரொமான்ஸ் உடனே கட் செய்துவிடுவார். வேண்டும் என்றால் உடனே வர வைத்துக்கொள்ளும் விடுவார்.

அந்த அளவிற்கு நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து ரொமான்ஸ் செய்வார். உலகநாயகன் கமலஹாசனை போல் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்த கதாநாயகன்களை இதுவரை பார்க்கவில்லை என்றும் ராதிகா தன்னுடைய பேட்டியில் ஓப்பனாக பேசியிருக்கிறார்.