வெற்றிக்காக முட்டி மோதி கொண்டிருக்கும் ரஜினி.. மொத்தமாய் மண் அள்ளி போட்ட ஜெயிலர் பட ஹீரோயின்

Super star Rajinikanth: தென்னிந்திய சினிமா ரசிகர்களை பொறுத்த வரைக்கும் எப்போதுமே நடிகர்கள் மற்றும் நடிகைகளின் படம் மற்றும் நடிப்பு திறமையை பார்ப்பதோடு அவர்களது சொந்த வாழ்க்கையையும் சேர்த்து தான் பார்ப்பார்கள். அப்படி சொந்த வாழ்க்கையில் சர்ச்சையை கிளப்பியவர்கள் நடித்த படங்களை புறக்கணித்து அது தோல்வியடையும் அளவிற்கு கூட சென்று இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஜெயிலர் படை ஹீரோயின் செய்திருக்கும் ஒரு காரியம் அந்த படத்திற்கே மிகப்பெரிய நெகட்டிவாக தற்போது மாறி இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பொறுத்த வரைக்கும் ஜெயிலர் படம் என்பது அவருடைய சினிமா கேரியரில் மிக முக்கியமான ஒன்று. கடந்த சில வருடங்களாகவே ரஜினிக்கு எந்த இடமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய வெற்றியை கொடுத்து விடவில்லை. இதனாலேயே ஜெயிலர் படத்தை எப்படியாவது ஒரு வெற்றி படமாக்கி விட வேண்டும் என்று தன்னால் முடிந்தவரை முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்.

ஜெயிலர் படத்தில் தமன்னாவும் ஹீரோயின் ஆக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு குடும்ப பாங்கான கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்த நேரத்தில் தமன்னா செய்த செயலால் மொத்த நெகட்டிவ் கமெண்ட்ஸும் ஜெயிலர் படம் பக்கம் திரும்பி விட்டது. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பயங்கர அப்செட்டில் இருக்கிறார்.

நடிகை தமன்னா நடிப்பில் ஜூ கர்தா என்னும் வெப் சீரிஸ் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ரிலீஸ் ஆனது. இந்த சீரிஸில் தமன்னா பயங்கர கவர்ச்சியாக நடித்ததோடு மட்டுமில்லாமல் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு வசனங்களையும் பேசி நடித்திருக்கிறார். ஓடிடி தளங்களுக்கு சென்சார் கட் இல்லை, மேலும் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கூட இந்த சீரிஸை பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

ஏற்கனவே இவர் நடித்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2விலும் பயங்கர கவர்ச்சி காட்டி பெயரை கெடுத்துக் கொண்டார். ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், தமன்னா இப்படி மொத்தமாய் பெயரை கெடுத்துக் கொண்டது அந்தப் படத்தின் மீதான பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்களையும் பாதிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதால் படக்குழு மொத்தமும் தமன்னா மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள்.

சினிமாவுக்கு வந்த புதிதில் கிளாமராக நடித்துக் கொண்டிருந்த தமன்னா அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது அதற்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றி நடித்துக் கொண்டிருந்தார். தற்போது பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் கவர்ச்சி களத்தில் இறங்கி சூப்பர் ஸ்டாரின் கனவுக்கும் ஆப்பு வைத்து விட்டார் என்று தான் தெரிகிறது.