பிரபல தொலைக்காட்சியில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.
அப்போது கோலமாவு கோகிலா திரைப்படத்தின் நடிகை நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் படத்தை இயக்கி வெற்றி படமாக கொடுத்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தன் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தை இயக்கி வெற்றி கொடுத்தார்.
தற்போது நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பல திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் விஜய் படத்திற்கு ஒரு ரசிகனாக தியேட்டரில் டிக்கெட் வாங்க காத்திருந்த நெல்சன் தற்போது விஜய்யை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதை பற்றி உணர்வுபூர்வமாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நானும் என் தந்தையும் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்கள். நான் விஜய் படத்தை இயக்குவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் அது தற்போது நடைபெற்றது, என் தந்தை டாக்டர் படம் ரிலீஸாகும் முன்பே இறந்துவிட்டார். அவர் இருந்திருந்தால் பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பார்.
தற்போது அவர் இல்லாதது வேதனையளிக்கிறது. இருந்தாலும் அவர் என்னுடைய வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று நெல்சன் திலிப் குமார் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 திரைப்படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தை இவர்களது காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து.