2 மடங்கு சம்பளம் கேட்ட சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. பழம் நழுவி வாயில் விழுந்தும் புண்ணியம் இல்ல

ஆரம்பகாலங்களில் சிவகார்த்திகேயனின் கடின உழைப்பும், அதிர்ஷ்டமும் சேர்ந்து இவரை நம்பர் ஒன் ஹீரோவாக ஆக்கின. தொடக்கத்தில் காமெடி திரைப்படங்களை தேர்வு செய்த நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன், விஜய்க்கு பின் குழந்தைகளும் பெண்களும் விரும்பும் நடிகராகவே மாறினார்.

இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குறித்து சாதனை படைத்தது. ஆதலால் வெகு சீக்கிரமே சிவகார்த்திகேயன் வளர்ச்சி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. சிவகார்த்திகேயன் வைத்து முதல் முதலாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த புது இயக்குனர் தற்போது ஓவர் ஆட்டிட்யூட் காட்டிக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு கிடைத்த ரஜினி பட வாய்ப்பு கை நடுவியது தற்போது ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனர் வர வர ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருகிறாராம். நான் எடுத்தால் படம் சூப்பர் ஹிட் தான்.

அதனால் எனக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டு வருகிறாராம். இவர் ஆட்டிட்யூட் அப்படி இருந்தால் வரப்பிரசாதமாய் கிடைத்த ஒரு பெரிய படத்தை இறந்துள்ளார். சிவகார்த்திகேயன் வைத்து டான் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் சிபி சக்கரவர்த்தி.

இவரை ரஜினியே கூப்பிட்டு படம் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் டான் படம் ஹிட்டான மமதையில் எல்லாத்தையும் இழந்துள்ளார். இவருக்கு ஆறு கோடிகள் சம்பளம் கொடுப்பதாக லைக்கா பேசி இருந்தது. ஆனால் இவரை 12 கோடிகளை கேட்டு எல்லாத்தையும் சொதப்பி விட்டாராம்.

முதலில் பணத்தை பார்க்காமல் ரஜினியை வைத்து இரண்டாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், ரெண்டு மடங்கு அதிகமாக சம்பளம் கேட்ட சிபி சக்கரவர்த்தி, ஓவர் ஆட்டிட்யூட் காரணத்தால் ரஜினி படம் வேண்டாம் என்றாராம். இதனால் பழம் நழுவி வாயில் விழுந்தும் புண்ணியம் இல்லாமல் போனது.