படங்களில் நடிக்கும் நடிகைகள் மீது கிசுகிசு என்பது எப்போதும் பரவும் ஒன்று தான். அவர்கள் கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடித்தால் போதும் உடனே அவர்கள் காதலிக்கிறார்கள், திருமணம் செய்யபோகிறார்கள் என்ற புரளிகள் சரளமாக கிளம்பும். அப்படி பல கிசுகிசுக்களில் சிக்கிய சில நடிகைகள் ஆமாம் என ஒத்துக்கொள்வார்கள், சில நடிகைகள் உண்மையாகவே இருந்தாலும் மழுப்புவார்கள்.
அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் நயன்தாரா, படங்களில் ஆரம்பத்தில் நடித்து வந்த இவர் சிம்புவுடன் காதல் வயப்பட்டார். அதன் பின் காதல் தோல்வியடைந்து, பிரபுதேவாவை திருமணமே செய்துக்கொண்டு இரண்டாவது மனைவியாக வலம் வந்தார், அதுவும் சரிப்படமால் போக உதயநிதியுடன் தொடர்ந்து படங்களில் நடித்து அவரையும் காதலித்து வந்தார்.
அதெல்லாம் செட்டாகுது என தெரிந்துக்கொண்டு, நயன்தாரா கடைசியில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகியுள்ளார். தற்போது நயன்தாரவையே மிஞ்சும் அளவிற்கு வளர்ந்து வரும் நடிகை ஒருவர், தான் காதலிக்கும் நபர்களின் லிஸ்டுகளை 4,5 என அசால்ட்டாக எகிற வைத்து வருகிறார். தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்தது மூலமாக பிரபலமான நடிகை தான் வாணிபோஜன்.
தெய்வமகள் சீரியலில் சத்யாவாக மிரட்டியிருப்பார். தற்போது படங்களில் நடித்து வரும் இவர், அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகர் கிருஷ்ணாவை ஒருதலையாக காதலித்தார். அதன் பின் அவர் நடிகை சாய சிங்கை திருமணம் செய்துக் கொண்டு செட்டிலானார். வாணிபோஜனும் சினிமாவில் எண்ட்ரியாகி நடிகர் வைபவுடன் காதலில் விழுந்து, ஊரை சுற்றி வந்தார்.
கொஞ்சம் நாட்களில் காதல் கசந்த நிலையில், நடிகர் ஜெய்யுடன் ஒரே வீட்டில் லிவிங் டூகெதரில் வசித்து வந்தார் வாணி போஜன். பின் ஜெய்யால் வாணிபோஜனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக அவரையும் கழட்டிவிட்டார். அதன் பின், ஓ மை கடவுளே படத்தில் நடித்து வந்த அசோக் செல்வனுடன் டேட்டிங் செய்து வந்த வாணிபோஜன் அவரையும் கழட்டிவிட்டு, தற்போது நடிகர் பரத்துடன் படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடித்து வருகிறார்.
நடிகர் பரத் திருமணமானவர், அவர் தற்போது ரீ-என்ட்ரி கொடுத்து மீரள், லவ் உள்ளிட்ட படங்களில் வாணிபோஜனுடன் நடித்து வந்த நிலையில், மிரள் படம் சக்கைப்போடு போட்டது. இந்நிலையில் இன்னும் அடுத்தடுத்த படங்களில் வாணிபோஜன் தொடர்ச்சியாக பரத்தின் படங்களில் கமீட்டாகி வருகிறாராம். தற்போது வாணிபோஜன் காதலுக்காக நடிகர்களை அவ்வப்போது மாற்றி மாற்றி வருகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.