கூடிய விரைவில் சினிமாவில் கேரியரை தொலைக்க போகும் நடிகை.. திமிரை காட்டியதால் வந்த விளைவு

தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டது. இதன் காரணமாக இப்பொழுது முழு நேரமாக தமிழ் சினிமாவில் மட்டும் வாய்ப்பிற்காக தேடி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இவருக்கு தனுஷ் நடிக்கும் படத்திலும், ஜெயம் ரவி நடிக்கும் படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த இரண்டு படங்களில் நடித்த உடனே இவருக்கு கொஞ்சம் திமிரு அதிகம் ஆகிவிட்டது. இதன் வெளிப்பாடாகத்தான் படப்பிடிப்புக்கு சொன்ன நேரத்துக்கு வராமல் வேணுக்கென்றுமே தாமதமாகவே படப்பிடிப்புக்கு வருவாராம்.

மேலும் படக்குழுவினர்கள் நேரத்திற்கு சூட்டிங்க்கு வாங்க என்று சொல்லுவாங்களாம். ஆனால் அதற்கு இவர் நான் சொன்ன நேரத்துல தான் நீங்க படப்பிடிப்பு வைக்க வேண்டும் என்று திமிராக சொல்வாராம். இவ்வளவு திமிருக்கும் மொத்த வடிவமாக வளம் வரும் நடிகை தான் பிரியா மோகன்.

இவர் சிவகார்த்திகேயனுடன் டான் படத்திலும், சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்ததன் மூலம் இவ்ளோ ஆட்டிட்யூட் காட்டி வருகிறார். இவர் மொத்தமே இன்னும் ஐந்து படங்கள் கூட தாண்டவில்லை. அதற்குள் இப்படி திமிர் பிடித்தவராய் இருக்கிறார் என்று பட குழுவில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாதிரி ஆட்டிட்யூட் காட்டி வருகின்ற நடிகை எத்தனை பேரை பார்த்திருப்போம். அவங்க எல்லாம் இருக்கிற இடமே தெரியாம போயிட்டாங்க, இவரும் அந்த லிஸ்ட்ல தான் வரபோறாரு என்று பேசிக்கொண்டு வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் கூடிய விரைவில் மார்க்கெட் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவார் என ஷூட்டிங் ஸ்பாட்டில் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

இப்படி இரண்டு படத்தில் நடிச்சதுக்குள்ள இவ்வளவு கெட்ட பெயர் வாங்கிய ஒரே நடிகை இவராகத் தான் இருப்பார். தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள தெரியாமல் இருந்து வரும் இந்த நடிகை அடுத்த படத்தில் ஜெயம் ரவி கூட எப்படி நடிக்க போகிறார் என்று பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.