கோலிவுட் வட்டாரத்தில் நயன்தாரா இடத்தை தற்போது த்ரிஷா தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்று தான் கூற வேண்டும். குழந்தை பிறந்த பின் நயன்தாரா மார்க்கெட் சரியா தொடங்கியது பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் திரிஷா புக்கிங் செய்யப்பட்டார்.
ஆனால் கதை தேர்வில் கவனம் செலுத்தாமல் புருஷனை விட்டு வேற ஒருத்தனை காதலிக்கிறது. விடாமுயற்சியில் புருஷன் கூட கோச்சிட்டு போகிறது, Thuglife படத்தில் கள்ளக்காதலையாய் இருக்கிறது. இந்த மாதிரியான கேரக்டர் தான் உங்களை தேடி வருதா இல்ல நீங்க நீங்கதான் அதை தேர்ந்தெடுக்குறீங்களா?
இல்ல இதுக்கு பின்னாடி வேற காரணம் ஏதும் உண்டா லைக் முன்னணி ஹீரோக்கள் படம் கிடைச்சா போதுங்கிற மாதிரி. அதுவும் இந்த தக் லைப் – ல முதல் பாதி கமலுக்கும், இரண்டாம் பாதி சிம்புவுக்கும் காதலியா வர்ற மாதிரி சப்பைக் கேரக்டருக்கெல்லாம் எப்படி ஒத்துக்குறீங்க?
இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். உச்சத்தில் இருக்கும் ஹீரோயின் தரமான கதைகளை தேர்வு செய்து நடித்தால் மட்டுமே நிலைத்திருக்க முடியும் இல்லையென்றால் காணாமல் போய்விடுவார்கள்.
இது போன்ற பதிவுகளை பார்த்த எஸ்வி சேகர் கொந்தளித்து போய் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது திரிஷா எப்படி நடிக்கவேண்டும் யாரோடு நடிக்க வேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. பிடிச்சா பாருங்க இல்லை பாக்காதீங்க.
இனியாவது தான் தேர்வு செய்யும் கதைகளில் கவனம் செலுத்தி ரசிகர்களை திருப்திப்படுத்துவார் திரிஷா என்று எதிர்பார்க்கப்படுகிறது. Vishwambhara, ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் Suriya-45 போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார்.