நடிகை மாளவிகா மோகன் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.
தனது கடின உழைப்பை போட்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இவர் நேரமோ என்னமோ படம் தோல்வியில் முடிந்தது. ஆனால் தங்களான் படத்திற்காக இவர் போட்ட கடுமையான உழைப்பு பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மாளவிகா ரசிகரின் ஒரு கேள்விக்கு சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார்.
வழக்கமான விஷயம்!
அந்தக் காலகட்ட சினிமாவை விட தற்போது நடிகர், நடிகைகள் பேட்டி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் நடிகர்கள் எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் என்று ஒரு பட்டாளமே கூடுகிறது.
இது நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையே பாதிக்கிறது என்றாலும் இவர்கள் சொல்லும் சாதாரண விஷயம் கூட வைரலாகி பெரிய அதிர்வலையை ஏற்படுத்துகிறது.
இப்படி கேட்பது சரியா?
இந்நிலையில் ரசிகர் ஒருவர் மாளவிகா மோகன் தன் வலைபக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களை பார்த்துவிட்டு “நீங்கள் ஏன் போட்டோ சூட்டில் போடும் ஆர்வம் மற்றும் உழைப்பை கூட சினிமாவில் போடுவதில்லை” என்ற கேள்வியை நக்கலாக கேட்டுள்ளார்.
சரியான பதிலடி
நான் நடித்திருந்த தங்கலான் படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் நான் கடின உழைப்பை போட்டு தான் நடித்தேன். அந்தப் படத்தில் என்னுடைய ஆர்வம் மற்றும் உழைப்பை பார்த்துமா இப்படி கேட்கிறீர்கள், உங்ககிட்ட என்ன சொல்லுவது என்று தெரியவில்லை நடிகை மாளவிகா கொடுத்த இந்த பதிலடி வலைதளத்தில் பேசும் பொருளாக மாறிவருகிறது.