Vijay: வளர்த்த கிடா மாறில் முட்டுகிறது என்ற ஒரு பழமொழி சொல்வார்கள். அப்படித்தான் தன்னை ஒரு ரஜினி ரசிகராக தமிழ் சினிமா மக்களிடையே அறிமுகப்படுத்திக் கொண்ட விஜய் பின்னர் ரஜினிக்கு தொழில் போட்டியானது.
உண்மையை சொல்லப்போனால் அவரவர் போட்டியாளர்களான கமல் மற்றும் அஜித் இந்தப் பந்தயத்தில் கலந்து கொள்ளாமல் சைலன்ட் மோடியில் இருந்தது தான் இந்த பஞ்சாயத்திற்கு காரணம்.
ரஜினியை நோக்கி விஜய் வீசிய அம்புகள்
அது மட்டும் இல்லாமல் வாரிசு படத்தை எப்படியாவது ஓட்டு விட வேண்டும் என்று தில்ராஜு கொளுத்தி போட்டது தான் இத்தனை வருடங்களாக வெடித்து சிதறியது.
ஆனால் ரஜினியை நோக்கி விஜய் எழுத வெற்றி அம்புகள் பற்றி யாருமே பேசவில்லை. அதாவது சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இது குறித்து மனம் திறந்து இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் லியோ படம் இயக்கிக் கொண்டிருக்கும்போது அவருடைய அடுத்த திட்டத்தை பற்றி விஜய் கேட்டிருக்கிறார்.
கமலுடன் அடுத்த படம் பண்ண போவதை லோகேஷ் சொல்ல நீ போய் அடுத்து ரஜினியுடன் படம் பண்ணு என்று சொல்லி இருக்கிறார்.
அப்படி உருவானது தான் கூலி. அதே மாதிரி விஜய் நடித்த பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கிக் கொண்டிருக்கும்போது தான் ரஜினிக்கு கதை சொல்ல ஊக்குவித்து அனுப்பி இருக்கிறார்.
அடுத்து விஜயை வைத்து ஜனநாயகன்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் எச் வினோத் ரஜினிக்கு கதை சொல்ல காத்திருக்கிறார்.
என்னதான் தயாரிப்பாளர்களின் சுயலாபத்திற்காக சில பிரச்சனைகளில் சைலன்ட் மூடாக இருந்தாலும் என்றுமே ரஜினி ரசிகன் என்பதை விஜய் திரைக்கு மறைவில் நிரூபித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.