மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னின் செல்வன் படத்தில் திரிஷாவிற்கு குந்தவை கதாபாத்திரம் கன கட்சிதமாக பொருந்தி இருந்தது. இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு அதே இயக்குனரை நம்பி படுமோசமான கதையை எப்படி தேர்வு செய்தார் என்று தெரியவில்லை.
தக் லைஃப் படத்தை பொருத்தவரை த்ரிஷா மும்பையில் நைட்ல Club-இல் அதாவது ரெட் லைட் ஏரியா-வில் ஜல்சா டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும்போது கமல் சந்திக்கிறார். அப்போது அவரை தன்னுடன் அழைத்து சென்று லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அபிராமி தான் தாலி கட்டிய முதல் மனைவி ஆனால் திரிஷா கீப்பாக வைத்திருப்பார் கமல்.
சிம்புவை பாதுகாத்து, தத்தெடுத்து வளர்த்து வருகிறார் கமல் அவருக்கும் த்ரிஷா மீது தீராத ஆசை. இதனால் ஒரு கட்டத்தில் கமலின் இடத்தை பிடிக்கும் சிம்பு திரிஷாவையும் சேர்த்து தன்னுடன் கீப்பாக வைத்துக் கொள்கிறார். இப்படி ஒரு கன்றாவியான கதையை எப்படி மணிரத்தினம் படத்தில் வைத்தார் என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
வெளிப்படையாக சொல்லப்போனால் அண்ணன்-தம்பி இருவரும் ஒரே பெண்ணுக்காக சண்டை போட்டுக்கொண்டு தங்களது ஆசையை தீர்த்துக் கொள்கிறார்கள். சிம்பு-த்ரிஷாவிற்கு இடையே ரொமான்ஸ் காட்சிகள் அற்புதமாக இருக்கும், ஆனால் கமலிடம் அது ஒத்துப் போகவில்லை.
இரண்டாம் பாதியில் கமல் ரீ-என்ட்ரி கொடுக்கும் போது பீச் ஹவுஸில் சிம்பு திரிஷாவிற்கு இடையே நடக்கும் சீன்களில் வரும் வசனங்கள் அனைத்துமே கைத்தட்டல்களை பெற்றது உண்மைதான். ஆனாலும் படம் முடிந்து வெளியே வரும்போது என்னடா இது கன்றாவியான கதாபாத்திரத்தில் திரிஷாவை நடிக்க வைத்து விட்டார்களே என்ற கோபம் தான் மிஞ்சியது.
இயக்குனர்களை கண்மூடித்தனமாக நம்பி உச்சத்தில் இருக்கும் திரிஷா இதுபோன்ற கதாபாத்திரத்தில் இனி நடிக்காமல் இருந்தாலே ரசிகர்கள் மனதில் என்றுமே நிலைத்திருப்பார். திரிஷாவை வைத்து ஏதாவது ஒரு ட்விஸ்ட் கதையில் வந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும் சூழ்நிலையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.