ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே நடந்து வந்தது. அதன் பின்னர் 60 ஓவர் வடிவிலான போட்டிகளை விளையாட ஆரம்பித்தனர். இப்படி நாட்கள் செல்ல செல்ல சுவாரஸ்யம் அதிகமாக இருப்பதற்காக போட்டிகளில் பல மாற்றங்கள் கொண்டு வருகின்றனர்.
இப்பொழுது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அதிலும் இந்தியாவை பொருத்தவரை டெஸ்ட், ஒரு நாள், 20 ஓவர் போட்டி போன்ற மூன்று வடிவிலான தொடர்களுக்கும் சுழற்சி முறையில் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாடி வருகிறார்கள்.
பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் குறைந்த வடிவிலான போட்டிகளில் விளையாடவே விருப்பம் காட்டுகின்றனர். அப்படி சமீபத்தில் மூன்று வீரர்கள் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று 20 ஓவர் போட்டி மட்டும் விளையாட திட்டமிட்டுள்ளனர்.
ஸ்டீபன் ஸ்மித்: 2027ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் கூட இவருக்கு ஆஸ்திரேலியா அணியை வழி நடத்தும் வாய்ப்பு இருந்தது ஆனால் இவர் திடீரென ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். ஆஸ்திரேலியாவின் விராட் கோலி இவர்தான்.
மார்க்கஸ் ஸ்டோய்னிஸ்: இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார் ஸ்டோய்னிஸ். இவரும் திடீரென ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து 20 ஓவர் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
கிளன் மேக்ஸ்வெல்: ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆள்ரவுண்டர் மேக்ஸ்வெல். பல போட்டிகளை ஆஸ்திரேலியா வெல்வதற்கு காரணமாய் இருந்தார் இவரும் இப்பொழுது ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துவிட்டார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பையில் கவனம் செலுத்தப் போகிறாராம்.