கோடியில் வாங்கும் விராட் கோலி பேசுவாரு, ஆவேசப்பட்ட ரசல்.. மறைமுகமாக வெஸ்ட் இண்டீஸ்க்கு வைத்த செக்

18 வருடங்களாக விளையாடி முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது பெங்களூர் அணி. ஆரம்பத்தில் இந்த அணியை கட்டமைத்தவர் விஜய் மல்லையா. முதல் சீசனில் இருந்து கிட்டத்தட்ட நான்கு ஐந்து சீசன் அந்த அணியை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டவர் இப்பொழுது வெளிநாட்டில் தலைமறைவாகிவிட்டார்

விராட் கோலி, ஏ பி டி வில்லியர்ஸ, கிரிஸ் கைல் என ஆதிக்கம் மிகுந்த அணியாக இருந்த போதிலும் கூட அவர்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் அந்த கனவை தற்போது நிஜமாக்கி இருக்கிறார் விராட் கோலி. இந்த சீசனில் ரஜத் படிதார் தலைமையில் கோப்பையை வென்றது ஆர்சிபி.

போட்டி முடிந்த பின்னர் மேத்யூ ஹைடனிடம் பேட்டி கொடுத்தார் விராட் கோலி. அப்பொழுது ஐபிஎல்-லை விட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிகவும் சிறப்பம்சம் வாய்ந்தது என்றும், ஐந்து மடங்கு இதைவிட உயர்ந்தது எனவும் பேசினார். இப்பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வும் பெற்றுவிட்டார் கோலி.

இந்த பேச்சுக்கு மாறுபட்ட கருத்தை தெரிவித்து ஆதங்கப்பட்டுள்ளார் கொல்கத்தா அணியை சேர்ந்த வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரி ரசல். விராட் கோலி போன்ற வீரர்கள் கோடிகளில் புரளுகிறார்கள் பிசிசிஐ அவர்களை நன்றாக பார்த்துக் கொள்கிறது. ஆனால் டெஸ்ட் விளையாடும் எங்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என எதிர் கருத்து தெரிவித்து வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகத்தை தாக்கியுள்ளார்.