ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர். இந்த தொடரில் இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் செயல்பட உள்ளார்கள். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ரிட்டையர்டுக்கு பின் இந்திய அணி விளையாடப் போகும் முதல் போட்டி.
இந்தியா பேட்டிங் யூனிட்டில் சற்று பலமாக இருந்தாலும், பந்துவீச்சை பொருத்தவரை இங்கிலாந்தை காட்டிலும் மிகவும் மோசமாக இருக்கிறது. வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக பந்து வீசும் முகமது சமி இந்த தொடரில் இடம்பெறவில்லை. காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை.
இந்திய அணிக்கு அஜித் அகார்கர் கூறிய செய்தி மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தற்காலிகமாக தான் சுப்பன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது ஒரு சோதனை முடிவாக தான் பார்க்கப்படுகிறது. வருங்கால இந்திய அணியை கட்டமைப்பதற்கு இது உதவும் என கூறி வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பும்ரா முழுவதுமாக விளையாட மாட்டார். அவருக்கு மாற்று வீரராக ஹர்தீப் சிங் செயல்படுவார் எனவும் கூறியுள்ளார். பும்ராவின் உடற்தகுதியை பொறுத்தே அவர் விளையாடும் போட்டிகள் தீர்மானிக்கப்படும்.
பும்ரா இல்லாத இந்திய அணியை இங்கிலாந்து வீரர்கள் எளிதாக சமாளித்து விடுவார்கள். முகமது சிராஜ் மட்டுமே அனுபவம் வாய்ந்த பவுலராக இருக்கிறார். இது இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்ரோக்ஸ்க்கு கிடைத்த வரப்பிரசாதம். இந்த தொடர் இந்திய அணிக்கு பெரும் சவாலாக அமையும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.