முரளி விஜய் போல் சக வீரரின் மனைவியை அபகரித்த இலங்கை வீரர்.. துரோகத்தில் முடிந்த கல்யாணம்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக். இவர்கள் ஒன்றாக இந்திய அணிக்கு விளையாடியவர்கள். தினேஷ் கார்த்திக்கிற்கு தான் முதலில் திருமணம் நடந்தது ஆனால் அந்த திருமண உறவு 5 வருடங்கள் மட்டுமே நீடித்தது.

தினேஷ் கார்த்திக் உடன் நட்பாய் பழகிய இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி விஜய் இவருக்கும் தினேஷ் கார்த்திக்கின் மனைவி நிகிதாவிருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. இது தினேஷ் கார்த்திக்கிற்கு தெரிய வரவே அவரை விவாகரத்து செய்தார்.

அதன்பின் நிகிதா, முரளி விஜய்யை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது அவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். தினேஷ் கார்த்திக்கும் அடுத்து சுனோஸ் வீராங்கனை தீபிகா பள்ளிக்கல்லை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களைப் போலவே இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஒருவரின் வாழ்க்கையில் இதே சம்பவம் நடந்துள்ளது. அந்த வீரரும் ஐந்து வருட இல்லற வாழ்க்கையை முடித்துக் கொண்டு மனைவியை விவாகரத்து செய்து உள்ளார் அவர் மனைவியும் அவர் காதலித்த இலங்கை வீரரை திருமணம் செய்து கொண்டார்

இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்குபவர்கள்  மற்றும் உபுல் தாரங்கா இவர்கள் களத்தையும் தாண்டி ஒரு நட்போடு பழகி வந்தனர். ஆனால் நட்புக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தரங்கா நடந்து கொண்டார்.

தில்சன் மனைவி மற்றும் தரங்கா இருவரும் காதலித்து எல்லை மீறி உள்ளார். அதன் பின் இந்த விஷயம் தில்ஷனுக்கு தெரிய வரவே மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் அப்புறம் தாரங்கா, தில்சனின் மனைவி நிலங்கா விதனாகேவை திருமணம் செய்து கொண்டார்.