இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற 370 ரன்கள் தேவை என்ற ரண்டுகட்டான் இலக்குடன் களமிறங்கியது. போட்டி 90% இந்திய அணியின் கையில் தான் இருந்தது. ஆனால் அதை அப்படியே மாற்றி இங்கிலாந்து வெற்றி பெற்றனர்.
மிகவும் நிதானமாக போட்டியை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே கிடைக்கும் போதெல்லாம் ரண்களை குவித்து வந்தது. ஒரு கட்டத்தில் இலக்கை எட்டி விடலாம் என்ற எண்ணம் முழுவதுமாக வந்தபின் ஆட்டத்தின் போக்கை வேறு விதமாக மாற்றினார்கள்.
முதல் விக்கெட்டுக்கு அந்த அணி 186 ரன்கள் சேர்த்தது. இதுதான் அவர்களுக்கு ஸ்ட்ராங்கான பவுண்டேஷன் ஆக அமைந்தது. இலக்கை எட்டி விடலாம் என்ற எண்ணத்தை முழுவதுமாக பெற்றுக் கொடுத்தது அந்த முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் தான். அதன் பின் வருபவர்கள் அதை பயன்படுத்திக் கொண்டனர்.
இந்தியா தோற்ற அந்த 2 இடங்கள்: பும்ராவை தவிர வேகப்பந்து வீச்சில் யாரும் சோபிக்கவில்லை. சார்துல் தாக்கூரை நம்பி மோசம் போனது இந்திய அணி. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து வெறும் 16 ஓவர் போட்டு அதிக ரன்களை வாரி வழங்கினார். ஆல்ரவுண்டர் லிஸ்டில் இருக்கும் இவர் பேட்டிங்கில் சொதப்பினார்.
சார்துல் தாக்கூருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டியை எடுத்திருக்கலாம். அதுவும் போக ஜடேஜாவை, கில் சரியாக பயன்படுத்தவில்லை. ஒரு கட்டத்தில் ஃபாஸ்ட் பௌலர்கள் தினரும் போது அவரை பயன்படுத்தவில்லை. இந்த இரு இடங்களிலும் ஆஸ்திரேலியா முன்னேறி சென்றது.